ஊட்டியில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 3-பேர் கைது.!!

ஊட்டியில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட மூவரை போலீசார் கைது செய்து, இவர்களிடமிருந்து, 25 ஆயிரத்து, 500 ரூபாய் கள்ள நோட்டு பறிமுதல் செய்யப்பட்டது.


நீலகிரி: ஊட்டியில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட மூவரை போலீசார் கைது செய்து, கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி லோயர் பஜார் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் ஒருவர் கள்ளநோட்டு கொடுத்து மது கேட்டு தகராறு செய்துள்ளார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் டாஸ்மாக் மதுக்கடையில் மதுவாங்கிய நபரிடம் இருந்த பணத்தைச் சோதனை செய்யக் கிராம நிர்வாக அலுவலர் பிச்சைக்கனியிடம் கொடுத்து சோதனை செய்தனர். அந்த பணம் கள்ளநோட்டு என உறுதி செய்யப்பட்டது. ஊட்டி பி1 போலீஸ் ஸ்டேஷனில் கிராம நிர்வாக அலுவலர் பிச்சைக்கனி புகார் தெரிவித்தார்.



இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், எஸ்.ஐ., ராஜாராம் மேற்கொண்ட விசாரணையில், கோவையைச் சேர்ந்த தீனதயாளன், 32, அவரது கூட்டாளி பாண்டிச்சேரியைச் சேர்ந்த கோபிநாத், 25, ஊட்டி காந்தள் பகுதியைச் சேர்ந்த அப்துல் ரகுமான், 28, இவர்கள் மூலம் கள்ளநோட்டுகளைப் புழக்கத்தில் விடுவது தெரியவந்தது.

இவர்களிடம் மேற்கொண்ட சோதனையில், 25 ஆயிரத்து, 500 ரூபாய் கள்ள நோட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மூவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...