ஊட்டியில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட மூவரை போலீசார் கைது செய்து, இவர்களிடமிருந்து, 25 ஆயிரத்து, 500 ரூபாய் கள்ள நோட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
நீலகிரி: ஊட்டியில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட மூவரை போலீசார் கைது செய்து, கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி லோயர் பஜார் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் ஒருவர் கள்ளநோட்டு கொடுத்து மது கேட்டு தகராறு செய்துள்ளார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் டாஸ்மாக் மதுக்கடையில் மதுவாங்கிய நபரிடம் இருந்த பணத்தைச் சோதனை செய்யக் கிராம நிர்வாக அலுவலர் பிச்சைக்கனியிடம் கொடுத்து சோதனை செய்தனர். அந்த பணம் கள்ளநோட்டு என உறுதி செய்யப்பட்டது. ஊட்டி பி1 போலீஸ் ஸ்டேஷனில் கிராம நிர்வாக அலுவலர் பிச்சைக்கனி புகார் தெரிவித்தார்.

இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், எஸ்.ஐ., ராஜாராம் மேற்கொண்ட விசாரணையில், கோவையைச் சேர்ந்த தீனதயாளன், 32, அவரது கூட்டாளி பாண்டிச்சேரியைச் சேர்ந்த கோபிநாத், 25, ஊட்டி காந்தள் பகுதியைச் சேர்ந்த அப்துல் ரகுமான், 28, இவர்கள் மூலம் கள்ளநோட்டுகளைப் புழக்கத்தில் விடுவது தெரியவந்தது.
இவர்களிடம் மேற்கொண்ட சோதனையில், 25 ஆயிரத்து, 500 ரூபாய் கள்ள நோட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மூவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி லோயர் பஜார் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் ஒருவர் கள்ளநோட்டு கொடுத்து மது கேட்டு தகராறு செய்துள்ளார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் டாஸ்மாக் மதுக்கடையில் மதுவாங்கிய நபரிடம் இருந்த பணத்தைச் சோதனை செய்யக் கிராம நிர்வாக அலுவலர் பிச்சைக்கனியிடம் கொடுத்து சோதனை செய்தனர். அந்த பணம் கள்ளநோட்டு என உறுதி செய்யப்பட்டது. ஊட்டி பி1 போலீஸ் ஸ்டேஷனில் கிராம நிர்வாக அலுவலர் பிச்சைக்கனி புகார் தெரிவித்தார்.
இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், எஸ்.ஐ., ராஜாராம் மேற்கொண்ட விசாரணையில், கோவையைச் சேர்ந்த தீனதயாளன், 32, அவரது கூட்டாளி பாண்டிச்சேரியைச் சேர்ந்த கோபிநாத், 25, ஊட்டி காந்தள் பகுதியைச் சேர்ந்த அப்துல் ரகுமான், 28, இவர்கள் மூலம் கள்ளநோட்டுகளைப் புழக்கத்தில் விடுவது தெரியவந்தது.
இவர்களிடம் மேற்கொண்ட சோதனையில், 25 ஆயிரத்து, 500 ரூபாய் கள்ள நோட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மூவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.