திருப்பூரில் கணவனுடன் இணைந்து வாங்கிய சுய உதவிக் குழு கடன் கட்டமுடியாததால் பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி..!

பெரியாயிபாளையத்தை சேர்ந்த ராசாத்தி என்பவர் மகளிர் சுய உதவிக் குழுக்களில் பெற்ற கடன்களை திரும்ப செலுத்த முடியாததால் தீக்குளிக்க முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: திருப்பூரில் கணவனுடன் இணைந்து வாங்கிய சுய உதவிக் குழு கடனை கட்டமுடியாததால் பெண் தீக்குளிக்க முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் திருமுருகன்பூண்டி, பெரியாயிபாளையத்தை சேர்ந்தவர் ராசாத்தி (35). இவரது கணவர் நல்லதம்பி (43). இவர்களுக்கு 12 வயதில் மகனும், 11 வயதில் மகளும் உள்ளனர்.

இந்நிலையில், இருவரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், கணவன் மனைவி இருவரும் இணைந்து மகளிர் சுய உதவிக் குழு கடன் அதிகளவில் பெற்றதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடன் அதிகமானதால் நல்லதம்பி கடனை தன்னால் அடைக்க முடியாது, குழுவுக்கு பணமும் தர முடியாது என கூறிவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ராசாத்தி வேலைக்குச் சென்று கடனை அடைக்க முடியாததால் கடன் கொடுத்த மகளிர் சுய உதவிக் குழுவினர் தன் வீட்டுக்கு வந்து பணத்தைக் கொடுக்க வேண்டும் என கட்டாயப்படுத்தியதாகவும், தன்னால் முழு கடனையும் அடைக்க முடியாது என்பதால் ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனுவை ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்க வந்தவர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார்.



இதனைப் பார்த்த அருகில் இருந்த பொதுமக்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் அவரை தடுத்து காப்பாற்றினர். இச்சம்பவத்தால் ஆட்சியர்‌ அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...