தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் தவிப்பு: முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.!!

தொழிலாளர் நலத்துறை அலட்சியத்தால் தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் தவித்து வருவதால், முதலமைச்சர் இப்பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைப்புசாரா தொழிலாளர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.


கோவை: தொழிலாளர் நலத்துறை அலட்சியத்தால் தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் தவித்து வருவதால், தமிழக முதல்வர் இப்பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைப்புசாரா தொழிலாளர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால், கடந்த 2016 முதல் தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள், நல வாரியம் சார்பில் வழங்கப்படும். பல்வேறு உதவிகளை பெற முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றும் தமிழக முதல்வர் இப்பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமைப்புசாரா தொழிலாளர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்ட அண்ணா கட்டுமானம் மற்றும் அமைப்புச்சார தொழிலாளர் முன்னேற்ற சங்க, பொதுச்செயலாளர், G.முருகேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்ட அண்ணா கட்டுமான அமைப்புச்சார தொழிலாளர் சங்கம் 1002/ கோவை, தொ.மு.ச. பேரவையுடன் இனணக்கப்பட்டது. தமிழக முதல்வர் அவர்களுக்கு தொழிற்சங்கத்தின் சார்பில் ஒரு வேண்டுகோள்.

கடந்த 2016-லிருந்து நல வாரியத் தொழிலாளர்கள் நலத்திட்டத்திற்கு விண்ணபித்த உறுப்பினர்களின் ஒய்வூதியம், 60 வயது பூர்த்தியானது முதலும் குடும்ப ஒய்வூதியம், இயற்கை மரணம், விபத்து மரணம், விபத்தில் ஊனமுற்றாலோ அல்லது இயற்கையின் உபதையால் ஊனமுற்றாலோ ஒய்வூதியம் கட்டாயமாக காலதாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கட்டுமானம், ஆட்டோ நல வாரியத்தில் அதிகளவு நிதியும் வருவாயும் இருப்பதைப் போல் அமைப்புச்சாரத் தொழிலாளர்களுக்கு நிதி ஆதாரத்தை ஏற்படுத்தி நிரந்தரமாக அவர்களும் தங்குதடையின்றி வாழ்வுரிமையை பெற்றிட நடவடிக்கை மேற்க்கொள்ள தொழிலாளர்களின் சார்பில் தமிழக முதல்வர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ்நாடு அரசு 1982ம் ஆண்டுச் சட்டம் 1994 தமிழ்நாடு கட்டுமான வாரியம் மற்றும் 1999 ம் ஆண்டு அமைப்புசார வாரியத்திற்கு நலத்திட்டத்தை அறிவித்து லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பலனடைந்து வந்தாலும் இந்த திட்டத்தில் புதுபிக்கவில்லை என்று காரணம்காட்டி நலத்திட்ட உதவிகளையும் வாரிய பதிவையும் இழந்தவர்களே அதிகம். இதைவிட கடந்த ஐந்து ஆண்டுகளகா பதிவு புதுப்பித்தல் மற்றும் திட்டத்தை பெறுவதற்க்காக தொழிலாளர்கள் பலமுறை அலைந்து தங்களது உழைப்பையும் நேரத்தையும் செலவழித்து மன உளைச்சல் அடைந்துள்ளனர்.

எந்த நோக்கத்திற்க்காக மறைந்த தலைவர்களான முத்தமிழறிஞர் கலைஞர், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி ஜெ.ஜெயலலிதா அவர்களும் அமைப்புச்சாரத் தொழிலாளர்கள் அவர்களுடைய வாழ்வுரிமையை எளியமுறையில் பெற்றிட தொழிலாளர் நலத்துறை மூலமாக தொழிலாளர் நல வாரியத்தை அமைத்தார்களோ அந்த நோக்கமே வீணாகி உள்ளது.

தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால், தகுதி இருந்தும் தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் நலவாரியத்தில் பதிவு செய்தல், பதிவை புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக நலவாரியத்தின் மூலம் கிடைக்கும் கல்வி உதவித்தொகை, ஓய்வு ஊதியம் உள்ளிட்ட பல்வேறு பணப்பலன்களை பெற முடியாமல் தவிக்கின்றனர்.

தமிழக முதல்வர் இப்பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைப்புசாரா தொழிலாளர்கள் அனைவரின் சார்பிலும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...