நூல் விலை உயர்வை கண்டித்து 26-ம் தேதி திருப்பூரில் முழு அடைப்பு.!!

நூல் விலை உயர்வை கண்டித்து வரும் 26-ம் தேதி திருப்பூரில் முழு அடைப்பு செய்யவும் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் நூல் விலை உயர்வை கண்டித்து வரும் 26-ம் தேதி முழு கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் முதல் நூல் விலையானது 130 ரூபாய் வரையிலும் உயர்ந்துள்ளது. கிலோ 220 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த நூல் விலை தற்போது 350 ரூபாயைக் கடந்து விற்பனையாகி வருகிறது.

மேலும் முன்பதிவின் மூலம் காத்திருப்பின் அடிப்படையிலேயே நூல் கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தொடர் விலை உயர்வால் ஏற்றுமதி மற்றும் உள்நாட்டுப் பின்னலாடை மற்றும் ஜவுளி உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஏற்றுமதியாளர்கள் பெரும் நஷ்டத்தையும் சந்தித்துள்ளனர்.

மூலப்பொருட்களான பருத்தி, நூல் ஏற்றுமதி மற்றும் பதுக்கல் காரணமாகச் செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்துவதே நூல் விலை உயர்வுக்கான காரணம் எனக் கூறப்படுகிறது. எனவே நூல் விலை உயர்வைக் கண்டித்தும் மூலப்பொருட்களான பருத்தி மற்றும் நூல் ஏற்றுமதியைத் தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் திருப்பூரைச் சேர்ந்த 116 அமைப்புக்கள் கலந்து கொண்ட அவசர ஆலோசனைக் கூட்டத்தில் 26ம் தேதி அன்று திருப்பூரில் முழு அடைப்பு செய்யவும் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...