நூல் விலை உயர்வை கண்டித்து 26-ம் தேதி திருப்பூரில் முழு அடைப்பு.!!

நூல் விலை உயர்வை கண்டித்து வரும் 26-ம் தேதி திருப்பூரில் முழு அடைப்பு செய்யவும் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் நூல் விலை உயர்வை கண்டித்து வரும் 26-ம் தேதி முழு கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் முதல் நூல் விலையானது 130 ரூபாய் வரையிலும் உயர்ந்துள்ளது. கிலோ 220 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த நூல் விலை தற்போது 350 ரூபாயைக் கடந்து விற்பனையாகி வருகிறது.

மேலும் முன்பதிவின் மூலம் காத்திருப்பின் அடிப்படையிலேயே நூல் கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தொடர் விலை உயர்வால் ஏற்றுமதி மற்றும் உள்நாட்டுப் பின்னலாடை மற்றும் ஜவுளி உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஏற்றுமதியாளர்கள் பெரும் நஷ்டத்தையும் சந்தித்துள்ளனர்.

மூலப்பொருட்களான பருத்தி, நூல் ஏற்றுமதி மற்றும் பதுக்கல் காரணமாகச் செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்துவதே நூல் விலை உயர்வுக்கான காரணம் எனக் கூறப்படுகிறது. எனவே நூல் விலை உயர்வைக் கண்டித்தும் மூலப்பொருட்களான பருத்தி மற்றும் நூல் ஏற்றுமதியைத் தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் திருப்பூரைச் சேர்ந்த 116 அமைப்புக்கள் கலந்து கொண்ட அவசர ஆலோசனைக் கூட்டத்தில் 26ம் தேதி அன்று திருப்பூரில் முழு அடைப்பு செய்யவும் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Newsletter

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...