நூல் விலை உயர்வை கண்டித்து 26-ம் தேதி திருப்பூரில் முழு அடைப்பு.!!

நூல் விலை உயர்வை கண்டித்து வரும் 26-ம் தேதி திருப்பூரில் முழு அடைப்பு செய்யவும் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் நூல் விலை உயர்வை கண்டித்து வரும் 26-ம் தேதி முழு கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் முதல் நூல் விலையானது 130 ரூபாய் வரையிலும் உயர்ந்துள்ளது. கிலோ 220 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த நூல் விலை தற்போது 350 ரூபாயைக் கடந்து விற்பனையாகி வருகிறது.

மேலும் முன்பதிவின் மூலம் காத்திருப்பின் அடிப்படையிலேயே நூல் கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தொடர் விலை உயர்வால் ஏற்றுமதி மற்றும் உள்நாட்டுப் பின்னலாடை மற்றும் ஜவுளி உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஏற்றுமதியாளர்கள் பெரும் நஷ்டத்தையும் சந்தித்துள்ளனர்.

மூலப்பொருட்களான பருத்தி, நூல் ஏற்றுமதி மற்றும் பதுக்கல் காரணமாகச் செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்துவதே நூல் விலை உயர்வுக்கான காரணம் எனக் கூறப்படுகிறது. எனவே நூல் விலை உயர்வைக் கண்டித்தும் மூலப்பொருட்களான பருத்தி மற்றும் நூல் ஏற்றுமதியைத் தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் திருப்பூரைச் சேர்ந்த 116 அமைப்புக்கள் கலந்து கொண்ட அவசர ஆலோசனைக் கூட்டத்தில் 26ம் தேதி அன்று திருப்பூரில் முழு அடைப்பு செய்யவும் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...