வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்: கோவை மாவட்டத்தில் 14,597 போ் விண்ணப்பம்..!

இதேபோல, நவம்பர் 27, 28 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் நடைபெறவுள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்கள் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் திருத்த முகாமில் 14 ஆயிரத்து 597 போ் விண்ணப்பம் அளித்துள்ளனர்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 1ம் தேதி வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 2022ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம் நடத்த தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், நவம்பர் 13, 14 மற்றும் 27, 28 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நவம்பர் 13, 14 ஆகிய தேதிகளில் வடகிழக்குப் பருவ மழையால் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பு முகாம் நடைபெறவில்லை.

இந்த நிலையில், அதற்கு மாற்றாக நவம்பா் 20, 21 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் நடத்த தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.

அதன்படி, கோவை மாவட்டத்தில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்றன. இதில் சனிக்கிழமை 4,514 போ் விண்ணப்பம் அளித்தனர்.

இரண்டாவது நாளாக நேற்று நடைபெற்ற சிறப்பு முகாமில் 10 ஆயிரத்து 83 போ் விண்ணப்பம் அளித்துள்ளனர். இரண்டு நாள்களிலும் சேர்த்து 14 ஆயிரத்து 597 போ் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள விண்ணப்பம் அளித்துள்ளனர்.

இதேபோல, நவம்பர் 27, 28 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் நடைபெறவுள்ளது. இதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம் என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...