வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்: கோவை மாவட்டத்தில் 14,597 போ் விண்ணப்பம்..!

இதேபோல, நவம்பர் 27, 28 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் நடைபெறவுள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்கள் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் திருத்த முகாமில் 14 ஆயிரத்து 597 போ் விண்ணப்பம் அளித்துள்ளனர்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 1ம் தேதி வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 2022ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம் நடத்த தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், நவம்பர் 13, 14 மற்றும் 27, 28 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நவம்பர் 13, 14 ஆகிய தேதிகளில் வடகிழக்குப் பருவ மழையால் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பு முகாம் நடைபெறவில்லை.

இந்த நிலையில், அதற்கு மாற்றாக நவம்பா் 20, 21 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் நடத்த தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.

அதன்படி, கோவை மாவட்டத்தில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்றன. இதில் சனிக்கிழமை 4,514 போ் விண்ணப்பம் அளித்தனர்.

இரண்டாவது நாளாக நேற்று நடைபெற்ற சிறப்பு முகாமில் 10 ஆயிரத்து 83 போ் விண்ணப்பம் அளித்துள்ளனர். இரண்டு நாள்களிலும் சேர்த்து 14 ஆயிரத்து 597 போ் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள விண்ணப்பம் அளித்துள்ளனர்.

இதேபோல, நவம்பர் 27, 28 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் நடைபெறவுள்ளது. இதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம் என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...