திருப்பூர் வருகை தரும் முதலமைச்சரிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்க தொழில்துறையினர் முடிவு..!

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முதல்வரிடம் வலியுறுத்த உள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் வருகை தரும் முதலமைச்சரிடம் தொழில்துறையினர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்க உள்ளதாக திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். அதனைத் தொடர்ந்து திருப்பூர் தொழில் துறையினருடன் நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தொழில் துறை சார்பில் பல்வேறு கோரிக்கைகள் முதல்வரிடம் முன்வைக்க தொழில்துறையினர் திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக, நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் தற்போதைய நிலவரப்படி நூல் விலையானது 350 வரை உயர்ந்துள்ளதால் பின்னலாடை துறை ஆனது வீழ்ச்சியடைந்து வரும் சூழலில் இருப்பதால் உடனடியாக நூல் விலையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை வைக்க உள்ளனர்.

மேலும், திருப்பூரில் இஎஸ்ஐ மருத்துவமனையை உடனடியாக செயல்பாட்டிற்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், திருப்பூரில் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். தொழில் நகரமான திருப்பூரில் பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருவதால் அவர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பு இருப்பிடங்களை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முதல்வரிடம் தொழில்துறையினர் முன்வைக்க உள்ளதாக திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...