கோவையில் முதல்வர் கலந்து கொள்ளும் அரசு விழாவில் பாஜக மற்றும் அதிமுக எம்.எல்.ஏ.,க்களுக்கு முன்வரிசையில் இருக்கை ஒதுக்கீடு.

தமிழக முதலமைச்சர் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்னும் சற்று நேரத்தில் கோவை வ.உ.சி. மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மேடையில் அரசு விழாவில் கலந்துகொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றவுள்ளார்.



கோவை: தமிழக முதலமைச்சர் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்னும் சற்று நேரத்தில் கோவை வ.உ.சி. மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மேடையில் அரசு விழாவில் கலந்துகொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றவுள்ளார்.

தொடர்ந்து, வ. உ.சி மைதானத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், மேடையின் முன் வரிசையில் கோவை மாவட்டத்தில் வெற்றி பெற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி உட்பட 10 எம்.எல்.ஏ.,க்களுக்கு விழாவின் முன் வரிசையில் இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ள நிலையில், அந்த இருக்கைகள் காலியாக காட்சியளிக்கின்றன. அரசு சார்பாக விழா நடக்கும் போது, எதிர்கட்சிஎம்எல்ஏக்களுக்கு முறைப்படி அழைப்பிதழ் வழங்கப்படுவது வழக்கம். ஆனால், கடந்த அதிமுக ஆட்சியில், கோவையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளுக்கு அப்போது இருந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக்கு அழைப்பிதழ் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக அரசின் ஜனநாயக நாகரீகமான செயல் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இருப்பினும், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பாஜகவின் வானதி சீனிவாசன் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்களா? இல்லை புறக்கணிப்பார்களா? என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரியவரும்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...