தமிழக முதலமைச்சர் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்னும் சற்று நேரத்தில் கோவை வ.உ.சி. மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மேடையில் அரசு விழாவில் கலந்துகொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றவுள்ளார்.
கோவை: தமிழக முதலமைச்சர் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்னும் சற்று நேரத்தில் கோவை வ.உ.சி. மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மேடையில் அரசு விழாவில் கலந்துகொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றவுள்ளார்.
தொடர்ந்து, வ. உ.சி மைதானத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், மேடையின் முன் வரிசையில் கோவை மாவட்டத்தில் வெற்றி பெற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி உட்பட 10 எம்.எல்.ஏ.,க்களுக்கு விழாவின் முன் வரிசையில் இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ள நிலையில், அந்த இருக்கைகள் காலியாக காட்சியளிக்கின்றன. அரசு சார்பாக விழா நடக்கும் போது, எதிர்கட்சிஎம்எல்ஏக்களுக்கு முறைப்படி அழைப்பிதழ் வழங்கப்படுவது வழக்கம். ஆனால், கடந்த அதிமுக ஆட்சியில், கோவையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளுக்கு அப்போது இருந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக்கு அழைப்பிதழ் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக அரசின் ஜனநாயக நாகரீகமான செயல் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இருப்பினும், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பாஜகவின் வானதி சீனிவாசன் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்களா? இல்லை புறக்கணிப்பார்களா? என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரியவரும்.