கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் சுமார் 16 ஏக்கர் பரப்பளவிலான கீரநத்தம் ஒட்டன் குட்டை நிரம்பியதையடுத்து இங்கு பரிசல் பயணம் மேற்கொள்ளப்பட்டது.
கோவை: கோவை வடக்கு பகுதியில் உள்ள ஒட்டன் குட்டை நீர் நிலையில் முதல் பரிசல் பயணம் மேற்கொள்ளப்பட்டது.
கோவை மாவட்டம் வடக்கு பகுதியில் பல ஏரி, குளம், குட்டைகள் இருக்கிறது. இருப்பினும் பல ஆண்டுகளாக அவை தண்ணீரை இல்லாமல் வறட்சியான பகுதியாகவே காணப்படுகிறது.

இதற்கு அந்த பகுதியின் மிக முக்கிய மழைநீர் வடிகாலான கௌசிகா நதியின் நீர்வழிப்பாதைகளில் மழைநீர் வராததும் ஒன்று.
இத்தகைய நிலையில், கடந்த சில தினங்களாக பெய்த மழையில் சுமார் 16 ஏக்கர் பரப்பளவிலான கீரணத்தம் ஒட்டன் குட்டை நிரம்பியது. அதன் முழு கொள்ளவை எட்டி காலிங்கராயன் குளம் நோக்கியும் பயணித்தது.
வறட்சியான கோவை வடக்கு பகுதியில் நீர் நிரம்பிய ஒரு நீர்நிலையாக உள்ள ஒட்டன் குட்டையில், கௌசிகா நீர்கரங்கள் அமைப்பினரால் பரிசல் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் தன்னார்வலர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு இயற்கைக்கு மலர் தூவி நன்றி செலுத்தினர்.
கோவை வடக்கில் பரிசல் பயணம் செய்த முதல் நீர்நிலையாகவும் இது கருதப்படுகிறது. இதற்கான நீர் வழிப்பாதைகள் இடிகரை பேரூராட்சியில் அமைந்துள்ளது. அவற்றை முறையாக பராமரிக்கும் போது ஒவ்வொரு ஆண்டும் இந்த நீர்நிலை நிரம்பும் என்று ஊர் மக்கள் நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.

கோவை மாவட்டம் வடக்கு பகுதியில் பல ஏரி, குளம், குட்டைகள் இருக்கிறது. இருப்பினும் பல ஆண்டுகளாக அவை தண்ணீரை இல்லாமல் வறட்சியான பகுதியாகவே காணப்படுகிறது.
இதற்கு அந்த பகுதியின் மிக முக்கிய மழைநீர் வடிகாலான கௌசிகா நதியின் நீர்வழிப்பாதைகளில் மழைநீர் வராததும் ஒன்று.
இத்தகைய நிலையில், கடந்த சில தினங்களாக பெய்த மழையில் சுமார் 16 ஏக்கர் பரப்பளவிலான கீரணத்தம் ஒட்டன் குட்டை நிரம்பியது. அதன் முழு கொள்ளவை எட்டி காலிங்கராயன் குளம் நோக்கியும் பயணித்தது.
வறட்சியான கோவை வடக்கு பகுதியில் நீர் நிரம்பிய ஒரு நீர்நிலையாக உள்ள ஒட்டன் குட்டையில், கௌசிகா நீர்கரங்கள் அமைப்பினரால் பரிசல் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் தன்னார்வலர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு இயற்கைக்கு மலர் தூவி நன்றி செலுத்தினர்.
கோவை வடக்கில் பரிசல் பயணம் செய்த முதல் நீர்நிலையாகவும் இது கருதப்படுகிறது. இதற்கான நீர் வழிப்பாதைகள் இடிகரை பேரூராட்சியில் அமைந்துள்ளது. அவற்றை முறையாக பராமரிக்கும் போது ஒவ்வொரு ஆண்டும் இந்த நீர்நிலை நிரம்பும் என்று ஊர் மக்கள் நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.