கோவை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவர் போக்சோவில் கைது.!!

கோவை அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 53-வயது முதியவர் கைது செய்யப்பட்டு போக்சோ சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.


கோவை: கோவை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவையைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன் வயது 53, இவர் வீட்டுக்கு முன்பு சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது அங்கு வந்த முதியவர் சிறுமிகளிடம் நைஸாகப் பேச்சுக் கொடுத்தார். மேலும் தான் ஐஸ்கிரீம் வாங்கித் தருவதாகக் கூறி தூக்கிச் சென்று சிறுமியிடம் பாலியல் செயலில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் சிறுமியை வீட்டில் விட்டுவிட்டுச் சென்றுவிட்டார். இந்த நிலையில் முதியவர் சிறுமியிடம் பாலியல் செயலில் ஈடுபட்ட அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து சிறுமியின் பெற்றோரிடம் காண்பித்து நடந்த சம்பவத்தைக் கூறியுள்ளார்.

இதைக் கேட்டதும் சிறுமியின் பெற்றோர்கள் அதிர்ச்சியாகி உடனடியாக சம்பவம் குறித்து சரவணம் பட்டி போலீசில் புகார் அளித்தனர்.

அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜாகிர் உசேன் சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய தெரியவந்தது. மேலும் இது போக்சோ வழக்கு என்பதால் வழக்கு கிழக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. போலீசார் ஜாகீர்உசேன் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...