கோவை அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 53-வயது முதியவர் கைது செய்யப்பட்டு போக்சோ சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை: கோவை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவையைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன் வயது 53, இவர் வீட்டுக்கு முன்பு சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது அங்கு வந்த முதியவர் சிறுமிகளிடம் நைஸாகப் பேச்சுக் கொடுத்தார். மேலும் தான் ஐஸ்கிரீம் வாங்கித் தருவதாகக் கூறி தூக்கிச் சென்று சிறுமியிடம் பாலியல் செயலில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் சிறுமியை வீட்டில் விட்டுவிட்டுச் சென்றுவிட்டார். இந்த நிலையில் முதியவர் சிறுமியிடம் பாலியல் செயலில் ஈடுபட்ட அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து சிறுமியின் பெற்றோரிடம் காண்பித்து நடந்த சம்பவத்தைக் கூறியுள்ளார்.
இதைக் கேட்டதும் சிறுமியின் பெற்றோர்கள் அதிர்ச்சியாகி உடனடியாக சம்பவம் குறித்து சரவணம் பட்டி போலீசில் புகார் அளித்தனர்.
அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜாகிர் உசேன் சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய தெரியவந்தது. மேலும் இது போக்சோ வழக்கு என்பதால் வழக்கு கிழக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. போலீசார் ஜாகீர்உசேன் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
கோவையைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன் வயது 53, இவர் வீட்டுக்கு முன்பு சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது அங்கு வந்த முதியவர் சிறுமிகளிடம் நைஸாகப் பேச்சுக் கொடுத்தார். மேலும் தான் ஐஸ்கிரீம் வாங்கித் தருவதாகக் கூறி தூக்கிச் சென்று சிறுமியிடம் பாலியல் செயலில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் சிறுமியை வீட்டில் விட்டுவிட்டுச் சென்றுவிட்டார். இந்த நிலையில் முதியவர் சிறுமியிடம் பாலியல் செயலில் ஈடுபட்ட அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து சிறுமியின் பெற்றோரிடம் காண்பித்து நடந்த சம்பவத்தைக் கூறியுள்ளார்.
இதைக் கேட்டதும் சிறுமியின் பெற்றோர்கள் அதிர்ச்சியாகி உடனடியாக சம்பவம் குறித்து சரவணம் பட்டி போலீசில் புகார் அளித்தனர்.
அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜாகிர் உசேன் சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய தெரியவந்தது. மேலும் இது போக்சோ வழக்கு என்பதால் வழக்கு கிழக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. போலீசார் ஜாகீர்உசேன் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.