பொள்ளாச்சியில் காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி.!!

வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி உயிர் நீத்த விவசாயிகளுக்குப் பொள்ளாச்சியில் காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர்.


கோவை: வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி உயிர் நீத்த விவசாயிகளுக்குப் பொள்ளாச்சியில் காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர்.

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாகப் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மத்திய அரசு எடுத்த இந்த முடிவு காலதாமதமானது, இந்த போராட்டத்தின் போது 700-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

உயிர்நீத்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகப் பொள்ளாச்சி தலைமை தொலைப்பேசி நிலையம் முன்பு கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர் பகவதி தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியவாறு டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி உயிர் நீத்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.

மத்திய அரசு வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப்பெற்றிருந்தால் 700 உயிர்கள் போயிருக்காது. பிரதமர் மோடி அறிவிப்போடு நின்று விடாமல் நாடாளுமன்ற முதல் கூட்டத் தொடரிலேயே நீக்கி சட்டமாக இயற்ற வேண்டும்.

5 மாநில தேர்தலுக்குப் பயந்து வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டிய காங்கிரஸ் கட்சியினர் ஏழை எளிய நடுத்தர மக்களைப் பாதிக்கும் விலைவாசி உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...