வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி உயிர் நீத்த விவசாயிகளுக்குப் பொள்ளாச்சியில் காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர்.
கோவை: வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி உயிர் நீத்த விவசாயிகளுக்குப் பொள்ளாச்சியில் காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர்.
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாகப் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மத்திய அரசு எடுத்த இந்த முடிவு காலதாமதமானது, இந்த போராட்டத்தின் போது 700-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
உயிர்நீத்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகப் பொள்ளாச்சி தலைமை தொலைப்பேசி நிலையம் முன்பு கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர் பகவதி தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியவாறு டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி உயிர் நீத்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.
மத்திய அரசு வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப்பெற்றிருந்தால் 700 உயிர்கள் போயிருக்காது. பிரதமர் மோடி அறிவிப்போடு நின்று விடாமல் நாடாளுமன்ற முதல் கூட்டத் தொடரிலேயே நீக்கி சட்டமாக இயற்ற வேண்டும்.
5 மாநில தேர்தலுக்குப் பயந்து வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டிய காங்கிரஸ் கட்சியினர் ஏழை எளிய நடுத்தர மக்களைப் பாதிக்கும் விலைவாசி உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாகப் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மத்திய அரசு எடுத்த இந்த முடிவு காலதாமதமானது, இந்த போராட்டத்தின் போது 700-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
உயிர்நீத்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகப் பொள்ளாச்சி தலைமை தொலைப்பேசி நிலையம் முன்பு கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர் பகவதி தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியவாறு டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி உயிர் நீத்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.
மத்திய அரசு வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப்பெற்றிருந்தால் 700 உயிர்கள் போயிருக்காது. பிரதமர் மோடி அறிவிப்போடு நின்று விடாமல் நாடாளுமன்ற முதல் கூட்டத் தொடரிலேயே நீக்கி சட்டமாக இயற்ற வேண்டும்.
5 மாநில தேர்தலுக்குப் பயந்து வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டிய காங்கிரஸ் கட்சியினர் ஏழை எளிய நடுத்தர மக்களைப் பாதிக்கும் விலைவாசி உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.