பள்ளி மாணவி தற்கொலை வழக்கில், கைதான தனியார் பள்ளி முதல்வர் ஜாமின் கோரி கோவை போக்சோ சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அப்போது, பதில் மனு தாக்கல் செய்ய போலீஸ் தரப்பில் அவகாசம் கோரியதால் வழக்கு, 24 -ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கோவை: கோவை பள்ளி மாணவி தற்கொலை வழக்கில், கைதான தனியார் பள்ளி முதல்வரின் ஜாமின் மனு மீதான விசாரணை, 24ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
கோவையில் 17 வயது பள்ளி மாணவிக்கு அந்த பள்ளியின் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி, 31 பாலியல் தொல்லை கொடுத்ததால் அந்த மாணவி கடந்த, 11ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அனைத்து மகளிர் போலீசார் 'போக்சோ' வில் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை கைது செய்தனர்.
மாணவி பாலியல் தொந்தரவு குறித்து பள்ளி முதல்வர் மினி ஜாக்சன் (எ) மீரா ஜாக்சனிடம், 46 புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காமலிருந்ததால் 'போக்சோ' வில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், பள்ளி முதல்வர் ஜாமின் கோரி கோவை போக்சோ சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனு நேற்று விசாரணை வந்தது. அப்போது, பதில் மனு தாக்கல் செய்ய போலீஸ் தரப்பில் அவகாசம் கோரியதால் வழக்கு, 24 -ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கோவையில் 17 வயது பள்ளி மாணவிக்கு அந்த பள்ளியின் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி, 31 பாலியல் தொல்லை கொடுத்ததால் அந்த மாணவி கடந்த, 11ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அனைத்து மகளிர் போலீசார் 'போக்சோ' வில் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை கைது செய்தனர்.
மாணவி பாலியல் தொந்தரவு குறித்து பள்ளி முதல்வர் மினி ஜாக்சன் (எ) மீரா ஜாக்சனிடம், 46 புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காமலிருந்ததால் 'போக்சோ' வில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், பள்ளி முதல்வர் ஜாமின் கோரி கோவை போக்சோ சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனு நேற்று விசாரணை வந்தது. அப்போது, பதில் மனு தாக்கல் செய்ய போலீஸ் தரப்பில் அவகாசம் கோரியதால் வழக்கு, 24 -ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.