போலீஸ் ஏட்டு வீட்டிலிருந்து வாகனத்தில் வெளியே வந்த நிலையில், திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக, அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கிருந்து, கோவை அரசு மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் இறந்தார்.
கோவை: பொள்ளாச்சி அருகே, பணிக்குச்செல்லும் போது, போலீஸ் ஏட்டு மயங்கி விழுந்து இறந்தார்.
பொள்ளாச்சி வடக்கிப்பாளையம் பிரிவு பாலாஜி நகரைச்சேர்ந்த ஜவஹர்லால் நேரு 52, பொள்ளாச்சி தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் தலைமைக்காவலராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், அவர் நேற்று காலை பணிக்குச்செல்ல, வீட்டிலிருந்து வாகனத்தில் வெளியே வந்த போது, திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
உடனடியாக, அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கிருந்து, கோவை அரசு மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் இறந்தார்.
இவருக்கு மனைவி, இரண்டு மகள்கள் உள்ளனர். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர். இச்சம்பவம், பொள்ளாச்சி போலீசாரிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி வடக்கிப்பாளையம் பிரிவு பாலாஜி நகரைச்சேர்ந்த ஜவஹர்லால் நேரு 52, பொள்ளாச்சி தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் தலைமைக்காவலராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், அவர் நேற்று காலை பணிக்குச்செல்ல, வீட்டிலிருந்து வாகனத்தில் வெளியே வந்த போது, திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
உடனடியாக, அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கிருந்து, கோவை அரசு மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் இறந்தார்.
இவருக்கு மனைவி, இரண்டு மகள்கள் உள்ளனர். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர். இச்சம்பவம், பொள்ளாச்சி போலீசாரிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.