கொரோனா, டெங்கு, ஜிகா உள்ளிட்ட நோய் தொற்றுகளை கட்டுப்படுத்த அனைத்து சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை: கோவை - கேரளா மாநில எல்லைகளில் கொரோனா, ஜிகா, டெங்கு வைரஸ் நோய் தொற்றுகள் தொடர்பாக கண்காணிப்பு தீவிரமடைந்துள்ளதால், கோவை வழியாக கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவது 80 சதவீதம் குறைந்துள்ளதாக மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கோவை - கேரளா எல்லைப்பகுதியில் உள்ள வாளையாறு சோதனை சாவடி உள்ளிட்ட 13 சோதனை சாவடிகள் வழியாக ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வந்தது.
இதனிடையே, கொரோனா, டெங்கு, ஜிகா உள்ளிட்ட நோய் தொற்றுகளை கட்டுப்படுத்த அனைத்து சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, கடந்த சில மாதங்களாக ரேசன் அரிசி கடத்தல் 80 சதவீதம் குறைந்து உள்ளது. ஒரு சிலர் இருசக்கர வாகனங்களில் கடத்துகின்றனர். இதனை உடனுக்குடன் கண்டறிந்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கோவை - கேரளா எல்லைப்பகுதியில் உள்ள வாளையாறு சோதனை சாவடி உள்ளிட்ட 13 சோதனை சாவடிகள் வழியாக ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வந்தது.
இதனிடையே, கொரோனா, டெங்கு, ஜிகா உள்ளிட்ட நோய் தொற்றுகளை கட்டுப்படுத்த அனைத்து சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, கடந்த சில மாதங்களாக ரேசன் அரிசி கடத்தல் 80 சதவீதம் குறைந்து உள்ளது. ஒரு சிலர் இருசக்கர வாகனங்களில் கடத்துகின்றனர். இதனை உடனுக்குடன் கண்டறிந்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.