கொரோனா, ஜிகா, டெங்கு கண்காணிப்பு எதிரொலி: கோவையில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தல் 80 சதவீதம் குறைவு..!

கொரோனா, டெங்கு, ஜிகா உள்ளிட்ட நோய் தொற்றுகளை கட்டுப்படுத்த அனைத்து சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


கோவை: கோவை - கேரளா மாநில எல்லைகளில் கொரோனா, ஜிகா, டெங்கு வைரஸ் நோய் தொற்றுகள் தொடர்பாக கண்காணிப்பு தீவிரமடைந்துள்ளதால், கோவை வழியாக கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவது 80 சதவீதம் குறைந்துள்ளதாக மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கோவை - கேரளா எல்லைப்பகுதியில் உள்ள வாளையாறு சோதனை சாவடி உள்ளிட்ட 13 சோதனை சாவடிகள் வழியாக ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வந்தது.

இதனிடையே, கொரோனா, டெங்கு, ஜிகா உள்ளிட்ட நோய் தொற்றுகளை கட்டுப்படுத்த அனைத்து சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, கடந்த சில மாதங்களாக ரேசன் அரிசி கடத்தல் 80 சதவீதம் குறைந்து உள்ளது. ஒரு சிலர் இருசக்கர வாகனங்களில் கடத்துகின்றனர். இதனை உடனுக்குடன் கண்டறிந்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...