கோவை மதுக்கரை அருகே வழிப்பறி கொள்ளையர்களை பொதுமக்கள் உதவியுடன் மடக்கிப் பிடித்த முதியவர்..!

போலீசார் விசாரணையில் அவர்கள் மதுக்கரை மார்க்கெட் சேர்ந்த ஹரிஹரன் (24), அஜித்குமார் (24) மற்றும் மதுக்கரை பகுதியைச் சேர்ந்த பிரின்ஸ் (24) என்பது தெரியவந்தது.


கோவை: கோவை மதுக்கரை அருகே வழிப்பறி கொள்ளையர்களை பொதுமக்கள் உதவியுடன் மடக்கிப் பிடித்த முதியவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

கோவை மதுக்கரையை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (64) தொழிலாளி. இவர் நேற்று மரப்பாலம் மலைச்சாமி கோயில் அருகே வந்தார்.

அப்போது, அங்கு நின்றிருந்த 2 வாலிபர்கள் திடீரென அவரை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் பாலசுப்ரமணியனிடம் மிரட்டி பணம் தருமாறு கூறினார். அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார்.

பின்னர், உடனே அந்த வாலிபர்கள் அவரின் பாக்கெட்டில் இருந்து பணத்தை பறித்தனர். அப்போது, பாலசுப்ரமணியம் சத்தம் போட்டார். அவரது சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் வருவதைப் பார்த்த கொள்ளையர்கள் தப்பிச் செல்ல முயற்சி செய்தனர்.

இதையடுத்து, உடனடியாக பாலசுப்ரமணியம் பொதுமக்கள் உதவியுடன் கொள்ளையர்கள் 3 பேரையும் மடக்கிப் பிடித்தார். பின்னர் அவர்களை மதுக்கரை போலீசில் ஒப்படைத்தார்.

போலீசார் விசாரணையில் அவர்கள் மதுக்கரை மார்க்கெட் சேர்ந்த ஹரிஹரன் (24), அஜித்குமார் (24) மற்றும் மதுக்கரை பகுதியைச் சேர்ந்த பிரின்ஸ் (24) என்பது தெரிய வந்தது.

இதையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...