கோவை போத்தனூரில் ரயில் பயணியிடம் செல்போன் பறித்துச் சென்ற வாலிபர் கைது..!

திருடு போன செல்போன் எண்ணை வைத்து கொள்ளையனை ரயில்வே போலீசார் மடக்கிப் பிடித்தனர்.


கோவை: கோவை போத்தனூரில் ரயிலில் பயணியிடம் செல்போன் பறித்துச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி பிரிவைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (35) தனியார் நிறுவன ஊழியர். இவர் சம்பவத்தன்று பெங்களூரில் இருந்து ரயில் மூலமாக கோவை வந்தார்.

இந்த நிலையில், கோவை வந்ததும் அவரது பாக்கெட்டில் இருந்த செல்போனை பார்த்தார். அப்போது, செல்போன் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர், உடனடியாக அவர் ரயிலில் இருந்து இறங்கி போத்தனூர் ரயில்வே போலீஸில் புகார் தெரிவித்தார். இது குறித்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும், திருடு போன செல்போன் எண்ணை வைத்துத் தேடி கொண்டிருந்தனர். அப்போது, செல்போன் எண்களை வைத்து கொள்ளையனை மடக்கிப் பிடித்தனர்.

விசாரணையில், இவர் திருப்பூரைச் சேர்ந்த லோகேஷ் (45) என்பதும் சந்தோஷ்குமார் செல்போனை திருடியது தெரியவந்தது. இதையடுத்து, ரயில்வே போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...