திருடு போன செல்போன் எண்ணை வைத்து கொள்ளையனை ரயில்வே போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
கோவை: கோவை போத்தனூரில் ரயிலில் பயணியிடம் செல்போன் பறித்துச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி பிரிவைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (35) தனியார் நிறுவன ஊழியர். இவர் சம்பவத்தன்று பெங்களூரில் இருந்து ரயில் மூலமாக கோவை வந்தார்.
இந்த நிலையில், கோவை வந்ததும் அவரது பாக்கெட்டில் இருந்த செல்போனை பார்த்தார். அப்போது, செல்போன் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர், உடனடியாக அவர் ரயிலில் இருந்து இறங்கி போத்தனூர் ரயில்வே போலீஸில் புகார் தெரிவித்தார். இது குறித்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும், திருடு போன செல்போன் எண்ணை வைத்துத் தேடி கொண்டிருந்தனர். அப்போது, செல்போன் எண்களை வைத்து கொள்ளையனை மடக்கிப் பிடித்தனர்.
விசாரணையில், இவர் திருப்பூரைச் சேர்ந்த லோகேஷ் (45) என்பதும் சந்தோஷ்குமார் செல்போனை திருடியது தெரியவந்தது. இதையடுத்து, ரயில்வே போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி பிரிவைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (35) தனியார் நிறுவன ஊழியர். இவர் சம்பவத்தன்று பெங்களூரில் இருந்து ரயில் மூலமாக கோவை வந்தார்.
இந்த நிலையில், கோவை வந்ததும் அவரது பாக்கெட்டில் இருந்த செல்போனை பார்த்தார். அப்போது, செல்போன் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர், உடனடியாக அவர் ரயிலில் இருந்து இறங்கி போத்தனூர் ரயில்வே போலீஸில் புகார் தெரிவித்தார். இது குறித்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும், திருடு போன செல்போன் எண்ணை வைத்துத் தேடி கொண்டிருந்தனர். அப்போது, செல்போன் எண்களை வைத்து கொள்ளையனை மடக்கிப் பிடித்தனர்.
விசாரணையில், இவர் திருப்பூரைச் சேர்ந்த லோகேஷ் (45) என்பதும் சந்தோஷ்குமார் செல்போனை திருடியது தெரியவந்தது. இதையடுத்து, ரயில்வே போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.