கோவை போத்தனூரில் ரயில் பயணியிடம் செல்போன் பறித்துச் சென்ற வாலிபர் கைது..!

திருடு போன செல்போன் எண்ணை வைத்து கொள்ளையனை ரயில்வே போலீசார் மடக்கிப் பிடித்தனர்.


கோவை: கோவை போத்தனூரில் ரயிலில் பயணியிடம் செல்போன் பறித்துச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி பிரிவைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (35) தனியார் நிறுவன ஊழியர். இவர் சம்பவத்தன்று பெங்களூரில் இருந்து ரயில் மூலமாக கோவை வந்தார்.

இந்த நிலையில், கோவை வந்ததும் அவரது பாக்கெட்டில் இருந்த செல்போனை பார்த்தார். அப்போது, செல்போன் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர், உடனடியாக அவர் ரயிலில் இருந்து இறங்கி போத்தனூர் ரயில்வே போலீஸில் புகார் தெரிவித்தார். இது குறித்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும், திருடு போன செல்போன் எண்ணை வைத்துத் தேடி கொண்டிருந்தனர். அப்போது, செல்போன் எண்களை வைத்து கொள்ளையனை மடக்கிப் பிடித்தனர்.

விசாரணையில், இவர் திருப்பூரைச் சேர்ந்த லோகேஷ் (45) என்பதும் சந்தோஷ்குமார் செல்போனை திருடியது தெரியவந்தது. இதையடுத்து, ரயில்வே போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...