மதுக்கரை பகுதியில் அவுட்டுக்காய் வீசி செல்லும் நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
கோவை: கோவை மதுக்கரை அருகே அவுட்டு்காய் வெடித்து சம்பவ இடத்திலேயே நாய் பரிதாபமாக உயிரிழந்தது.
கோவை மதுக்கரை அருகே உள்ள பாலு கார்டன் பகுதியில் யாரோ மர்ம நபர் அவுட்டுக்காயை வீசி சென்றுள்ளார். நேற்று அந்த வழியாக சென்ற நாய் அவுட்டுக்காயை கடித்தது.
இதனையடுத்து, கண்ணிமைக்கும் நேரத்தில் வெடித்துச் சிதறியது. இதில் நாய் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே தலை சிதறி இறந்தது. இதனைப் பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் கூறியதாவது:-
கடந்த வாரம் இதே போல் யாரோ மர்ம நபர் அவுட்டுக்காயை இந்த பகுதியில் வீசி சென்றனர். அப்போது, அந்த வழியாக சென்ற கார் அதன் மீது ஏறியது. உடனே அவுட்டுக்காய் வெடித்தது.
இதில் அதிர்ஷ்டவசமாக காரில் சென்றவர்களுக்கு எதுவும் ஏற்படவில்லை. எனவே, போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து அவுட்டுக்காய் வீசி செல்லும் நபர்களை கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவை மதுக்கரை அருகே உள்ள பாலு கார்டன் பகுதியில் யாரோ மர்ம நபர் அவுட்டுக்காயை வீசி சென்றுள்ளார். நேற்று அந்த வழியாக சென்ற நாய் அவுட்டுக்காயை கடித்தது.
இதனையடுத்து, கண்ணிமைக்கும் நேரத்தில் வெடித்துச் சிதறியது. இதில் நாய் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே தலை சிதறி இறந்தது. இதனைப் பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் கூறியதாவது:-
கடந்த வாரம் இதே போல் யாரோ மர்ம நபர் அவுட்டுக்காயை இந்த பகுதியில் வீசி சென்றனர். அப்போது, அந்த வழியாக சென்ற கார் அதன் மீது ஏறியது. உடனே அவுட்டுக்காய் வெடித்தது.
இதில் அதிர்ஷ்டவசமாக காரில் சென்றவர்களுக்கு எதுவும் ஏற்படவில்லை. எனவே, போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து அவுட்டுக்காய் வீசி செல்லும் நபர்களை கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.