கடந்த செப்டம்பர் மாதம் மெட்ரோ ரயில் வழித்தடங்கள் தொடர்பாக, நிலவியல் சர்வே எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கோவை: கோவை மாவட்டத்தில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவதற்கு, மண் பரிசோதனை செய்யும் பணி துவங்கியுள்ளது.
கோவை நகரின் முக்கியமான சாலைகளில் உயர்மட்ட பாலங்கள் கட்டினாலும், வாகன பெருக்கத்துக்கேற்ப, உள்கட்டமைப்பு வசதிகள் போதுமானதாக இல்லை. நகரம் அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருவதாலும், மக்கள் தொகை பெருகி வருவதாலும் பொது போக்குவரத்தை பொதுமக்கள் பயன்படுத்தும் பழக்கத்தை உருவாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.
அதனால், அனைத்து பிரதான சாலைகளிலும் பாலங்கள் கட்டினாலும், சென்னையை போல் நம்மூரிலும் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது.
முதல்கட்டமாக, நகரை சுற்றிலும், 144 கி.மீ., தூரத்துக்கு திருச்சி ரோடு, அவிநாசி ரோடு, சத்தியமங்கலம் ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு வழியாக மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இதற்கான சாத்தியக்கூறு தொடர்பாக, தனியார் நிறுவனத்தினர் ஆய்வு செய்து திட்ட அறிக்கை தயாரித்து வருகின்றனர்.
கடந்த செப்டம்பர் மாதம், மெட்ரோ ரயில் வழித்தடங்கள் தொடர்பாக, நிலவியல் சர்வே எடுக்கப்பட்டது. தற்போது, காந்திபுரம் பகுதியில் மண் பரிசோதனை செய்யும் பணியை துவக்கியுள்ளனர்.
கோவை நகரின் முக்கியமான சாலைகளில் உயர்மட்ட பாலங்கள் கட்டினாலும், வாகன பெருக்கத்துக்கேற்ப, உள்கட்டமைப்பு வசதிகள் போதுமானதாக இல்லை. நகரம் அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருவதாலும், மக்கள் தொகை பெருகி வருவதாலும் பொது போக்குவரத்தை பொதுமக்கள் பயன்படுத்தும் பழக்கத்தை உருவாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.
அதனால், அனைத்து பிரதான சாலைகளிலும் பாலங்கள் கட்டினாலும், சென்னையை போல் நம்மூரிலும் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது.
முதல்கட்டமாக, நகரை சுற்றிலும், 144 கி.மீ., தூரத்துக்கு திருச்சி ரோடு, அவிநாசி ரோடு, சத்தியமங்கலம் ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு வழியாக மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இதற்கான சாத்தியக்கூறு தொடர்பாக, தனியார் நிறுவனத்தினர் ஆய்வு செய்து திட்ட அறிக்கை தயாரித்து வருகின்றனர்.
கடந்த செப்டம்பர் மாதம், மெட்ரோ ரயில் வழித்தடங்கள் தொடர்பாக, நிலவியல் சர்வே எடுக்கப்பட்டது. தற்போது, காந்திபுரம் பகுதியில் மண் பரிசோதனை செய்யும் பணியை துவக்கியுள்ளனர்.