ஆசிரியர் பணியில் இருந்து விடுபட்டு சென்றது, மாணவி மாற்று சான்றிதழ் வாங்கி சென்றது போன்ற எவ்வித பதிவும் பதிவேடுகளில் பராமரிக்கவில்லை. ஆய்வு அறிக்கை முழுமையாக சமர்ப்பித்துள்ளோம்.
கோவை: கோவை பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் குழு ஆய்வை முழுமையாக முடித்து அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
கோவையில் பள்ளி மாணவி தற்கொலை வழக்கு தொடர்பாக மாணவி படித்த பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்களிடம் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.விசாரணை கடந்த 16-ம் தேதிக்கு முன்பே முடிந்த நிலையில், அறிக்கை தயார் செய்யும் பணி நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், தற்போது மாநில பள்ளிக்கல்வித்துறைக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.மாணவி, சம்மந்தப்பட்ட இயற்பியல் ஆசிரியர், தலைமையாசிரியர்கள் பள்ளி செயல்பாடுகள் குறித்த பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு அவர்கள் வழங்கிய பதில்களின் அடிப்படையில் அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து பேசிய அதிகாரிகள், "பள்ளியில் முறையாக பதிவேடுகள் ஏதும் பராமரிக்கப்படவில்லை. ஆசிரியர் பணியில் இருந்து விடுபட்டு சென்றது, மாணவி மாற்று சான்றிதழ் வாங்கி சென்றது போன்ற எவ்வித பதிவும் பதிவேடுகளில் பராமரிக்கவில்லை. ஆய்வு அறிக்கை முழுமையாக சமர்ப்பித்துள்ளோம்,'' என்று தெரிவித்தனர்.