கொரோனா, ஜிகா, டெங்கு தடுப்பு நடவடிக்கையாக கேரளா செல்லும் பேருந்துகளுக்குக் கிருமி நாசினி தெளிப்பு.!!

கொரோனா, ஜிகா, டெங்கு உள்ளிட்ட நோய்த்தொற்றுகள் பரவுவதைத் தடுக்க உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து கேரளா செல்லும் பேருந்துகளுக்கு மாநகராட்சி ஊழியர்களால் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.


கோவை: கொரோனா, ஜிகா, டெங்கு உள்ளிட்ட நோய்த்தொற்றுகள் பரவுவதைத் தடுக்க உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து கேரளா செல்லும் பேருந்துகளுக்கு மாநகராட்சி ஊழியர்களால் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இப்பணி தொடர்ந்து நடைபெறும் என மாநகராட்சி அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் கொரோனா, ஜிகா, டெங்கு உள்ளிட்ட நோய்த் தொற்றுகள் பரவுவதைத் தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் உத்தரவின் பேரில் மாநகர பகுதியில் மாநகராட்சி ஊழியர்களும், புறநகர்ப் பகுதியில் சுகாதாரத்துறை ஊழியர்களும் இந்த நோய்த் தொற்று தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார்கள்.

இதனிடையே உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து கேரளா செல்லும் பேருந்துகளுக்கு நோய்த் தொற்றுகள் பரவாமல் இருக்கக் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பேருந்துகளின் டயர், இருக்கைகள் மற்றும் பேருந்துகள் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, கைப்பிடிகளிலும் கிருமி நாசினி மூலம் துடைக்கப்பட்டது.

கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து கேரளாவிற்கு 25-க்கும் மேற்பட்ட பேருந்துகள் செல்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கோவையிலிருந்து கேரளா செல்லும் பேருந்துகளுக்குக் கிருமி நாசினி தெளிக்கும் பணி தொடர்ந்து நடைபெறும். நோய்த் தொற்றுகளின் தாக்கம் குறைந்து இல்லை என்கிற நிலை வரும் வரை இப்பணிகள் தொடர்ந்து நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...