கொரோனா, ஜிகா, டெங்கு தடுப்பு நடவடிக்கையாக கேரளா செல்லும் பேருந்துகளுக்குக் கிருமி நாசினி தெளிப்பு.!!

கொரோனா, ஜிகா, டெங்கு உள்ளிட்ட நோய்த்தொற்றுகள் பரவுவதைத் தடுக்க உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து கேரளா செல்லும் பேருந்துகளுக்கு மாநகராட்சி ஊழியர்களால் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.


கோவை: கொரோனா, ஜிகா, டெங்கு உள்ளிட்ட நோய்த்தொற்றுகள் பரவுவதைத் தடுக்க உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து கேரளா செல்லும் பேருந்துகளுக்கு மாநகராட்சி ஊழியர்களால் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இப்பணி தொடர்ந்து நடைபெறும் என மாநகராட்சி அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் கொரோனா, ஜிகா, டெங்கு உள்ளிட்ட நோய்த் தொற்றுகள் பரவுவதைத் தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் உத்தரவின் பேரில் மாநகர பகுதியில் மாநகராட்சி ஊழியர்களும், புறநகர்ப் பகுதியில் சுகாதாரத்துறை ஊழியர்களும் இந்த நோய்த் தொற்று தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார்கள்.

இதனிடையே உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து கேரளா செல்லும் பேருந்துகளுக்கு நோய்த் தொற்றுகள் பரவாமல் இருக்கக் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பேருந்துகளின் டயர், இருக்கைகள் மற்றும் பேருந்துகள் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, கைப்பிடிகளிலும் கிருமி நாசினி மூலம் துடைக்கப்பட்டது.

கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து கேரளாவிற்கு 25-க்கும் மேற்பட்ட பேருந்துகள் செல்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கோவையிலிருந்து கேரளா செல்லும் பேருந்துகளுக்குக் கிருமி நாசினி தெளிக்கும் பணி தொடர்ந்து நடைபெறும். நோய்த் தொற்றுகளின் தாக்கம் குறைந்து இல்லை என்கிற நிலை வரும் வரை இப்பணிகள் தொடர்ந்து நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...