கட்சிக்கு களங்கம் ஏற்படுத்திய தந்தை, மகன் அதிமுகவில் இருந்து நீக்கம்: ஓபிஎஸ்-இபிஎஸ் அறிக்கை..!

பொள்ளாச்சியில் செயின் பறிப்பில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி மற்றும் கட்சிக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்த அவரது தந்தை ஆகியோர் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதாக அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.


கோவை: பொள்ளாச்சியில் செயின் பறிப்பில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி மற்றும் கட்சிக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்த அவரது தந்தை ஆகியோர் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதாக அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

பொள்ளாச்சி கரிகால அம்மன் வீதியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி(71). இவர் கடந்த நவம்பர் 2ஆம் தேதி வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த தம்பதிகள் இருவர் முகவரி கேட்பது போல், மூதாட்டியிடம் இருந்து தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர்.

இதுகுறித்து கிழக்கு காவல்நிலையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில், கடந்த 7ஆம் தேதி போலீசார் நடத்திய வாகன தணிக்கையில் நகை பறிப்பில் ஈடுபட்ட தம்பதிகள் இருவர் பிடிபட்டனர்.



விசாரணையில், இருவரும் பொள்ளாச்சி நாச்சிமுத்து கவுண்டர் வீதியைச் சேர்ந்த அஜய் மற்றும் அவரது மனைவி சுருதி என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



கைது செய்யப்பட்ட அஜய் அதிமுக நகர 5 வது வார்டு தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் என்பதும், அவரது தந்தை தண்டபாணி அதிமுக நகர எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் என்பதும் தெரியவந்த நிலையில், இன்று பொள்ளாச்சி நகர எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் தண்டபாணி மற்றும் பொள்ளாச்சி நகர 5வது வார்டு தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் அஜய் ஆகியோர் கட்சி கட்டுப்பாட்டு விதிகளை மீறி கட்சியின் பெயருக்கு களங்கம் உண்டாக்கும் வகையில் நடந்துகொண்டதால் கட்சியின் அனைத்து பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து இருவரும் நீக்கப்படுவதாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...