பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய நெடுஞ்சாலை துறை கோவை கோட்ட அலுவலகத்தில் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்


பொது சேம நலநிதி கணக்கிற்கு பிடித்தம் செய்து சேர்க்கப்படாத தொகையினை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய நெடுஞ்சாலைத் துறை கோவை கோட்ட அலுவலகத்தில் நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



சார்நிலை பணியமைப்பு விதி 35 (a) புறந்தள்ளிடும் போக்கை கைவிட்டு விதிகளை பின்பற்றி முதுநிலை பட்டியலை வெளியிட்டு பதவி வாய்ப்புகள் வழங்கிட வேண்டும். பொது சேம நலநிதி கணக்கிற்கு பிடித்தம் செய்து சேர்க்கப்படாத தொகையினை உடனடியாக செயல்படுத்த வேண்டும். 

மேலும், விதிமுறைக்கு புறம்பாக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உயரதிகாரிகளின் வீட்டு பணி மற்றும் மற்ற பணிகளுக்கு பயன்படுத்துவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட தமிழ்நாடு நெடுஞ்சாலை பணியாளர்கள் சங்கதினர் 50-க்கும் மேற்பட்டோர் திருச்சி சாலையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை துறை கோவை கோட்ட அலுவலகத்தில் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து கோவை மாவட்ட பணியாளர் சங்க தலைவர் வெள்ளிங்கிரி கூறும்போது, கோரிக்கைகள் குறித்து பலமுறை தமிழக முதலமைச்சர், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர், முதன்மை இயக்குநர், கோட்ட பொறியாளர் உள்ளிட்ட பலரிடம் புகார் மனு அளித்தும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்தவர். 

தங்களை அழைத்து பேசி தீர்வு காணாவிட்டால் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் மாநிலக் குழுவிடம் ஆலோசித்து அடுத்தகட்ட போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...