புகாரின் பேரில் மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: பொள்ளாச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் எல்இடி டிவி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து மகாலிங்கபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள டி.கோட்டாம்பட்டி ராஜராஜேஸ்வரி நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (48). இவர் சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வருகிறார்.
கடந்த 15ம் தேதி தனது உறவினர் ஒருவரின் இறப்பிற்காக வெளியூர் சென்று உள்ளார். சீனிவாசன் நேற்று இரவு மீண்டும் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
அப்போது, வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த இரண்டரை பவுன் தங்க நகை மற்றும் வீட்டிலிருந்த எல்இடி டிவி கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து, சீனிவாசன் மகாலிங்கபுரம் காவல் நிலையத்தில் கொள்ளை குறித்து புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள டி.கோட்டாம்பட்டி ராஜராஜேஸ்வரி நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (48). இவர் சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வருகிறார்.
கடந்த 15ம் தேதி தனது உறவினர் ஒருவரின் இறப்பிற்காக வெளியூர் சென்று உள்ளார். சீனிவாசன் நேற்று இரவு மீண்டும் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
அப்போது, வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த இரண்டரை பவுன் தங்க நகை மற்றும் வீட்டிலிருந்த எல்இடி டிவி கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து, சீனிவாசன் மகாலிங்கபுரம் காவல் நிலையத்தில் கொள்ளை குறித்து புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.