பொள்ளாச்சி அருகே 16 வயது சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்த இளைஞர் கைது..!

கடத்தல் மற்றும் குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து வாலிபரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே 16 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள தன்னாசியப்பன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் அருண்குமார்(21). மணவறை அலங்கார வேலை செய்து வருகிறார்.

இவரும், பொள்ளாச்சியை சேர்ந்த 16 வயது சிறுமியை கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து , அருண்குமார் சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்துள்ளார்.

இது குறித்து சிறுமியின் தாய் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனையடுத்து, விசாரணை மேற்கொண்ட போலீசார் அருண்குமார் மீது கடத்தல் மற்றும் குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...