திருப்பூரில் 18-வது ஆண்டு 'யார்ன் எக்ஸ்போ' கண்காட்சி.!!

திருப்பூரில் 18-வது யார்ன் எக்ஸ்போ (துணி நூல் கண்காட்சி) துவங்கியது. இந்த கண்காட்சி மூலம் வெளிநாடு மற்றும் உள்நாட்டு வர்த்தகர்களிடையே புதிய சந்தையை உருவாக்கி மீண்டும் ஆர்டர்கள் கிடைக்கும் என பின்னலாடை உற்பத்தியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.



திருப்பூர் :திருப்பூரில் 18-வது யார்ன் எக்ஸ்போ (துணி நூல் கண்காட்சி) துவங்கியது.



திருப்பூர் அவினாசி சாலை ஐ.கே.எப். வளாகத்தில் 18-வது ஆண்டு யார்ன் எக்ஸ்போ கண்காட்சி இன்று துவங்கியது. 3-நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில் 118-அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.



இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டு தங்கள் ஆடை தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தியுள்ளனர். இந்த கண்காட்சியைக் காண அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து வர்த்தகர்கள் முன்பதிவு செய்துள்ளனர். பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து நூல் உற்பத்தி செய்யும் முறை அனைவரையும் கவர்வதாக அமைந்தது.



கொரோனா பாதிப்பு காரணமாகப் பின்னலாடை வர்த்தகம் சுணக்கமாக உள்ள நிலையில் இந்த கண்காட்சி மூலம் வெளிநாடு மற்றும் உள்நாட்டு வர்த்தகர்களிடையே புதிய சந்தையை உருவாக்கி மீண்டும் ஆர்டர்கள் கிடைக்கும் என பின்னலாடை உற்பத்தியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...