திருப்பூரில் 18-வது யார்ன் எக்ஸ்போ (துணி நூல் கண்காட்சி) துவங்கியது. இந்த கண்காட்சி மூலம் வெளிநாடு மற்றும் உள்நாட்டு வர்த்தகர்களிடையே புதிய சந்தையை உருவாக்கி மீண்டும் ஆர்டர்கள் கிடைக்கும் என பின்னலாடை உற்பத்தியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் :திருப்பூரில் 18-வது யார்ன் எக்ஸ்போ (துணி நூல் கண்காட்சி) துவங்கியது.
திருப்பூர் அவினாசி சாலை ஐ.கே.எப். வளாகத்தில் 18-வது ஆண்டு யார்ன் எக்ஸ்போ கண்காட்சி இன்று துவங்கியது. 3-நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில் 118-அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டு தங்கள் ஆடை தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தியுள்ளனர். இந்த கண்காட்சியைக் காண அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து வர்த்தகர்கள் முன்பதிவு செய்துள்ளனர். பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து நூல் உற்பத்தி செய்யும் முறை அனைவரையும் கவர்வதாக அமைந்தது.
கொரோனா பாதிப்பு காரணமாகப் பின்னலாடை வர்த்தகம் சுணக்கமாக உள்ள நிலையில் இந்த கண்காட்சி மூலம் வெளிநாடு மற்றும் உள்நாட்டு வர்த்தகர்களிடையே புதிய சந்தையை உருவாக்கி மீண்டும் ஆர்டர்கள் கிடைக்கும் என பின்னலாடை உற்பத்தியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.