தீர்க்கப்படாத பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்-அமைச்சர் செந்தில் பாலாஜி

பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் பெரிய நெகமத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி அளித்தனர்.


கோவை: பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் பெரிய நெகமத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி அளித்தனர்.

கோவை மாவட்டத்தில் மக்கள் சபை மூலம் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நகராட்சி மற்றும் பேரூராட்சி வாரியாக மக்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையில் நேரடியாகச் சென்று மனுக்களைப் பெற்று வருகிறார்.



இதன் ஒரு பகுதியாகப் பொள்ளாச்சி அருகே உள்ள பெரிய நெகமம் பேரூராட்சியில் மக்கள் சபை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின் போது, கடந்த 30-ஆம் தேதி முதல் 150- இடங்களில் நேரடியாகச் சென்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது.



முதற்கட்டமாக 25,000 மனுக்கள் வரும் என்று எதிர்பார்த்த நிலையில், ஒரு லட்சத்திற்கும் அதிகமான மனுக்கள் பொது மக்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் பத்து முறை, பதினைந்து முறை பொதுமக்கள் கொடுத்த எந்த மனுவிற்கும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் பொதுமக்கள் நம்பிக்கையோடு மனுக்கள் வழங்கியுள்ளனர்.

இதன் மீது முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார். பெரும்பாலானவர்கள் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா கேட்டு வழங்கியுள்ளனர். பெறப்பட்ட மனுக்கள் துறை வாரியாக ஆய்வு செய்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...