விடாது பெய்த கனமழை.. குடியிருப்புகளுக்குள் புகுந்த மழை நீர்: உதகை சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு..!

உதகையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக காந்தள் என்னும் பகுதியில் குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்தது, கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உதகை சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.



நீலகிரி: உதகையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக காந்தள் என்னும் பகுதியில் குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்தது, கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உதகை சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

இதில் உதகை அருகே உள்ள காந்தல் பகுதியில் தாழ்வான இடங்களில் உள்ள 30-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மழைநீர் புகுந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பகுதிக்குச் சென்ற தீயணைப்பு துறையினர் மழை நீர் புகுந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களைப் பத்திரமாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.



இதனைத் தொடர்ந்து இன்று காலை காந்தல் பகுதியில் கனமழையால் பாதிப்படைந்த பகுதிகளை உதகை சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் மற்றும் நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி ஆகியோர் மழைநீர் செல்லக்கூடிய கால்வாய்களைத் தூர்வாரும் பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.



கனமழையால் காந்தல் குடியிருப்பு பகுதிகளுக்குள் தேக்கமடைந்த குப்பை கழிவுகள் மற்றும் சேரும் சகதிகளை அகற்றும் பணியில் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்நிலையில் இன்றும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், கன மழையின் தாக்கம் நீடித்தால் பொது மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு பொது மக்களைத் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...