உயர்மின் கோபுரங்கள் விளைநிலங்கள் வழியாகக் கொண்டு செல்லக்கூடாது-ஜி.ராமகிருஷ்ணன்

உயர்மின் கோபுரங்கள் விளைநிலங்கள் வழியாகக் கொண்டு செல்லக்கூடாது என்பதை முதலமைச்சர் கவனத்திற்குக் கொண்டு செல்ல இருக்கின்றோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


கோவை: உயர்மின் கோபுரங்கள் விளைநிலங்கள் வழியாகக் கொண்டு செல்லக்கூடாது என்பதை முதலமைச்சர் கவனத்திற்குக் கொண்டு செல்ல இருக்கின்றோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

வ.உ.சிதம்பரனாரின் 85-வது நினைவு தினத்தை முன்னிட்டு கோவை மத்தியச் சிறையில் உள்ள அவரது சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் அஞ்சலி செலுத்தினார்.

சிறை வளாகத்தில் உள்ள செக்கிற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் அன்னியராட்சிக்கு எதிராக வ.உ.சி துவங்கிய போராட்டம் சுதந்திரப் போராட்டத்திற்கு அடித்தளமாக அமைந்தது. ஜெய் பீம் படத்தில் நடித்த நடிகர் சூர்யா மீதும் அதன் இயக்குனர் மீதும் கடும் விமர்சன தாக்குதல் நடத்தப்படுகின்றது.

திரைத்துறையை இயல்பாக இயங்க அனுமதிக்க வேண்டும் என பாரதிராஜா உட்பட திரைத்துறையினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதை சி.பி.எம் கட்சி வரவேற்கின்றது.

உயர்மின் கோபுரங்கள் விளைநிலங்கள் வழியாகக் கொண்டு செல்லக்கூடாது என்பதை முதல்வர் கவனத்திற்குக் கொண்டு செல்ல இருக்கின்றோம். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விரைவில் வர இருக்கும் நிலையில், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் தலைவர், மேயர் பதவிகளுக்கு நேரடி தேர்தலாக நடத்த மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசு இந்திய பொருளாதாரத்தை, விவசாயத்தைப் பன்னாட்டு நிறுவனங்களிடம் கொடுத்து வருகின்றது. துறைமுகம், விமான நிலையம், பொதுத்துறை நிறுவனம், போன்றவற்றை அடகு வைக்கும் கொள்கையை மத்திய அரசு கையாள்கின்றது.

வ.உ.சியின் லட்சியத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்கின்றது. மாநில முதல்வர் வ.உ.சி. சிலையைக் கோவையில் திறக்க இருக்கின்றார். மத்தியச் சிறையில் வ.உ.சி சிலைக்கு மாலை அணிவிக்கவும், செக்கிற்கு அஞ்சலி செலுத்த அனுமதி பெறவும் கடினமாக இருக்கின்றது.

கோவையில் வ.உ.சிக்கு சிலை வைக்கும் இடத்தில் மத்தியச் சிறையிலிருந்து செக்கினை எடுத்து வந்து மக்கள் பார்வைக்கு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பா.ஜ.க பெட்ரோல், டீசல் விலை உயர்விற்குப் போராட்டம் நடத்துவது கேலிக்குரியது.

ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு கலால் வரி 33- ரூபாயும், டீசலுக்கு 32- ரூபாயும் வசூலிக்கின்றது. வருடத்திற்கு 2-லட்சத்து 87000-ஆயிரம் கோடி வரியைக் கலால் வரி மற்றும் கூடுதல் வரி மூலம் வசூலிக்கப்படுகின்றது. பா.ஜ.கவின் போராட்ட நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...