போலி உர பூச்சிக்கொல்லி நிறுவன பிரதிநிதிகளை நம்பி ஏமாற வேண்டாம் என விவசாய மக்களுக்கு வேளாண் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோவை: போலி உர பூச்சிக்கொல்லி நிறுவன பிரதிநிதிகளை நம்பி ஏமாற வேண்டாம் என விவசாய மக்களுக்கு வேளாண் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், உரிமம் பெறாத, அங்கீகாரம் இல்லாத நிறுவனப் பிரதிநிதிகள் மூலம், தென்னந்தோப்புகளில் உரமிடுதல், பூச்சி மருந்து வேர் வழி செலுத்துதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, வேளாண்துறைக்குப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அங்கீகாரம், உரிய உரம், பூச்சி மருந்து உரிமம் இல்லாத நிறுவனப்பிரதிநிதிகளின் பரிந்துரைகளை ஏற்க வேண்டாம் என, வேளாண், உழவர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறு உரமிடுதல், பயிர் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வதால் அதிக செலவு, உரியப் பலன்கள் கிடைப்பதில்லை.
எனவே வட்டார கள அலுவலர்கள், வேளாண் துறை அலுவலர்களின் ஆலோசனை பெற்று இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அங்கீகாரம் இல்லாத தோட்டங்களுக்கே நேரடியாக வந்து மருந்துகளை விற்பனை செய்வோரை நம்பி ஏமாற வேண்டாம். இத்தகைய முகவர்கள் குறித்த தகவல்களை, வேளாண் துறையில் தெரிவித்தால், உரக்கட்டுப்பாட்டு சட்டம், 1985, பூச்சிக்கொல்லி மருந்து சட்டம், 1968ன் படி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, வேளாண் துறை இணை இயக்குனர் சித்ரா தேவி தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், உரிமம் பெறாத, அங்கீகாரம் இல்லாத நிறுவனப் பிரதிநிதிகள் மூலம், தென்னந்தோப்புகளில் உரமிடுதல், பூச்சி மருந்து வேர் வழி செலுத்துதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, வேளாண்துறைக்குப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அங்கீகாரம், உரிய உரம், பூச்சி மருந்து உரிமம் இல்லாத நிறுவனப்பிரதிநிதிகளின் பரிந்துரைகளை ஏற்க வேண்டாம் என, வேளாண், உழவர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறு உரமிடுதல், பயிர் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வதால் அதிக செலவு, உரியப் பலன்கள் கிடைப்பதில்லை.
எனவே வட்டார கள அலுவலர்கள், வேளாண் துறை அலுவலர்களின் ஆலோசனை பெற்று இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அங்கீகாரம் இல்லாத தோட்டங்களுக்கே நேரடியாக வந்து மருந்துகளை விற்பனை செய்வோரை நம்பி ஏமாற வேண்டாம். இத்தகைய முகவர்கள் குறித்த தகவல்களை, வேளாண் துறையில் தெரிவித்தால், உரக்கட்டுப்பாட்டு சட்டம், 1985, பூச்சிக்கொல்லி மருந்து சட்டம், 1968ன் படி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, வேளாண் துறை இணை இயக்குனர் சித்ரா தேவி தெரிவித்தார்.