போலி நிறுவன பிரதிநிதிகளை நம்ப வேண்டாம்... விவசாயிகளுக்கு வேளாண் துறை எச்சரிக்கை.!!

போலி உர பூச்சிக்கொல்லி நிறுவன பிரதிநிதிகளை நம்பி ஏமாற வேண்டாம் என விவசாய மக்களுக்கு வேளாண் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


கோவை: போலி உர பூச்சிக்கொல்லி நிறுவன பிரதிநிதிகளை நம்பி ஏமாற வேண்டாம் என விவசாய மக்களுக்கு வேளாண் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், உரிமம் பெறாத, அங்கீகாரம் இல்லாத நிறுவனப் பிரதிநிதிகள் மூலம், தென்னந்தோப்புகளில் உரமிடுதல், பூச்சி மருந்து வேர் வழி செலுத்துதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, வேளாண்துறைக்குப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அங்கீகாரம், உரிய உரம், பூச்சி மருந்து உரிமம் இல்லாத நிறுவனப்பிரதிநிதிகளின் பரிந்துரைகளை ஏற்க வேண்டாம் என, வேளாண், உழவர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறு உரமிடுதல், பயிர் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வதால் அதிக செலவு, உரியப் பலன்கள் கிடைப்பதில்லை.

எனவே வட்டார கள அலுவலர்கள், வேளாண் துறை அலுவலர்களின் ஆலோசனை பெற்று இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அங்கீகாரம் இல்லாத தோட்டங்களுக்கே நேரடியாக வந்து மருந்துகளை விற்பனை செய்வோரை நம்பி ஏமாற வேண்டாம். இத்தகைய முகவர்கள் குறித்த தகவல்களை, வேளாண் துறையில் தெரிவித்தால், உரக்கட்டுப்பாட்டு சட்டம், 1985, பூச்சிக்கொல்லி மருந்து சட்டம், 1968ன் படி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, வேளாண் துறை இணை இயக்குனர் சித்ரா தேவி தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...