போலி நிறுவன பிரதிநிதிகளை நம்ப வேண்டாம்... விவசாயிகளுக்கு வேளாண் துறை எச்சரிக்கை.!!

போலி உர பூச்சிக்கொல்லி நிறுவன பிரதிநிதிகளை நம்பி ஏமாற வேண்டாம் என விவசாய மக்களுக்கு வேளாண் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


கோவை: போலி உர பூச்சிக்கொல்லி நிறுவன பிரதிநிதிகளை நம்பி ஏமாற வேண்டாம் என விவசாய மக்களுக்கு வேளாண் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், உரிமம் பெறாத, அங்கீகாரம் இல்லாத நிறுவனப் பிரதிநிதிகள் மூலம், தென்னந்தோப்புகளில் உரமிடுதல், பூச்சி மருந்து வேர் வழி செலுத்துதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, வேளாண்துறைக்குப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அங்கீகாரம், உரிய உரம், பூச்சி மருந்து உரிமம் இல்லாத நிறுவனப்பிரதிநிதிகளின் பரிந்துரைகளை ஏற்க வேண்டாம் என, வேளாண், உழவர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறு உரமிடுதல், பயிர் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வதால் அதிக செலவு, உரியப் பலன்கள் கிடைப்பதில்லை.

எனவே வட்டார கள அலுவலர்கள், வேளாண் துறை அலுவலர்களின் ஆலோசனை பெற்று இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அங்கீகாரம் இல்லாத தோட்டங்களுக்கே நேரடியாக வந்து மருந்துகளை விற்பனை செய்வோரை நம்பி ஏமாற வேண்டாம். இத்தகைய முகவர்கள் குறித்த தகவல்களை, வேளாண் துறையில் தெரிவித்தால், உரக்கட்டுப்பாட்டு சட்டம், 1985, பூச்சிக்கொல்லி மருந்து சட்டம், 1968ன் படி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, வேளாண் துறை இணை இயக்குனர் சித்ரா தேவி தெரிவித்தார்.

Newsletter

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...