திருப்பூரில் கனமழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பொதுமக்கள் அவதி.!!

திருப்பூரில் 4-மணி நேரம் பெய்த கனமழையால் வீடுகளில் மழை நீர் புகுந்து, மின்சாரமும் பல இடங்களில் துண்டிக்கப்பட்டதால், மக்கள் தங்கள் வீடுகளை விட்டு உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடைந்தனர்.



திருப்பூர்: திருப்பூரில் 4-மணி நேரம் பெய்த கனமழையால் வீடுகளில் மழை நீர் புகுந்து, மின்சாரமும் பல இடங்களில் துண்டிக்கப்பட்டதால், மக்கள் தங்கள் வீடுகளை விட்டு உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடைந்தனர்.

திருப்பூர் மாநகரில் நேற்று மாலை முதல் சுமார் 4 மணி நேரம் கனமழை பெய்தது. இடி மின்னலுடன் பெய்த கனமழையால்மங்கலம் சாலை, பல்லடம் சாலை, பெருமாநல்லூர் சாலை, கல்லூரி சாலை, ஊத்துக்குளி சாலை என பிரதான சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.



இதனால் பணி முடிந்து வீடுகளுக்குத் திரும்பிய வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்தனர்.

மழை நீரில் நனைந்த வாகனங்கள் சில ஸ்டார்ட் ஆகாததால் அவற்றைத் தள்ளியபடி மழையில் நனைந்து கொண்டே தங்கள் வீடுகளுக்குச் சென்றனர்.

தொடர் மழை காரணமாகத் தாழ்வான பகுதிகளிலிருந்த வீடுகளிலும் மழை நீர் புகுந்தது. அங்கேரிபாளையம், போயம்பாளையம், ராயபுரம், காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளில் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

மேலும், மின்சாரமும் பல இடங்களில் துண்டிக்கப்பட்டதால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடைந்தனர்.





Newsletter

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...