திருப்பூரில் 4-மணி நேரம் பெய்த கனமழையால் வீடுகளில் மழை நீர் புகுந்து, மின்சாரமும் பல இடங்களில் துண்டிக்கப்பட்டதால், மக்கள் தங்கள் வீடுகளை விட்டு உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடைந்தனர்.
திருப்பூர்: திருப்பூரில் 4-மணி நேரம் பெய்த கனமழையால் வீடுகளில் மழை நீர் புகுந்து, மின்சாரமும் பல இடங்களில் துண்டிக்கப்பட்டதால், மக்கள் தங்கள் வீடுகளை விட்டு உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடைந்தனர்.
திருப்பூர் மாநகரில் நேற்று மாலை முதல் சுமார் 4 மணி நேரம் கனமழை பெய்தது. இடி மின்னலுடன் பெய்த கனமழையால்மங்கலம் சாலை, பல்லடம் சாலை, பெருமாநல்லூர் சாலை, கல்லூரி சாலை, ஊத்துக்குளி சாலை என பிரதான சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் பணி முடிந்து வீடுகளுக்குத் திரும்பிய வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்தனர்.
மழை நீரில் நனைந்த வாகனங்கள் சில ஸ்டார்ட் ஆகாததால் அவற்றைத் தள்ளியபடி மழையில் நனைந்து கொண்டே தங்கள் வீடுகளுக்குச் சென்றனர்.
தொடர் மழை காரணமாகத் தாழ்வான பகுதிகளிலிருந்த வீடுகளிலும் மழை நீர் புகுந்தது. அங்கேரிபாளையம், போயம்பாளையம், ராயபுரம், காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளில் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
மேலும், மின்சாரமும் பல இடங்களில் துண்டிக்கப்பட்டதால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடைந்தனர்.