கோவையில் வழிப்பறி திருடர்களைப் பிடித்து போலீசில் ஒப்படைத்த நண்பர்கள்.!!

அன்னூர் அருகே வழிப்பறிக் கொள்ளையர்களை நண்பர்களுடன் சேர்ந்து மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்த மெக்கானிக்கை போலீசார் பாராட்டினர்.


கோவை: அன்னூர் அருகே வழிப்பறிக் கொள்ளையர்களை நண்பர்களுடன் சேர்ந்து மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்த மெக்கானிக்கை போலீசார் பாராட்டினர்.

புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் ராஜேஷ் வயது 31, இவர் கோவை அன்னூர் பகுதியில் தங்கி மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு அன்னூர் அடுத்த கஞ்சம் பள்ளி அருகே நடந்து சென்றார்.

அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் திடீரென அவரை வழிமறித்து மிரட்டி பணம் தருமாறு கத்தியைக் காட்டி கூறினர். அப்போது ரஜி தன்னிடம் பணம் இல்லை என்றார். உடனே அவர் தள்ளிவிட்டு பாக்கெட்டில் இருந்து செல்போனை பறித்துச் சென்றனர்.

அதிர்ச்சி அடைந்த ரஜி சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். திருடர்கள் தப்பி ஓடிவிட்டனர். உடனடியாக தனது நண்பர்களுக்கு போன் போட்டு வரவழைத்து போட்டார் சைக்கிளில் திருடர்களைத் தேடிச் சென்றனர். அப்போது திருடர்கள் ருத்தமபாளையம் அருகே நின்று கொண்டிருந்தனர்.

இதனை பார்த்த ரஜி மற்றும் அவரது நண்பர்கள் 3 பேரும் வழிப்பறிக் கொள்ளையர்களை மடக்கிப் பிடித்தனர். அவர்களை அன்னூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அவர்கள் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த நீஷ்தார் 21, மற்றும் காரமடையைச் சேர்ந்த தினேஷ் 22 என்பது தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் தினேஷ் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்கு உள்ளது தெரியவந்தது. அவர்களைப் பிடித்துக் கொடுத்த ரஜி மற்றும் நண்பர்களை போலீசார் பாராட்டினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...