திருப்பூரில் மின்சாரம் தாக்கி மரத்தில் தொங்கிய முதியவர்.!!

மின்சாரம் தாக்கி மரத்திலேயே தொங்கிய முதியவரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர். இந்த விபத்தில் முதியவரின் கைகளில் மட்டும் தீ காயம் ஏற்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் அருகே மின்சாரம் தாக்கி மரத்திலேயே தொங்கிய முதியவரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர். இந்த விபத்தில் முதியவரின் கைகளில் மட்டும் தீ காயம் ஏற்பட்டது. இதனிடையே முதியவரை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்களை அப்பகுதி பொது மக்கள் வெகுவாக பாராட்டினர்.

திருப்பூர் மாவட்டம் குண்டடம், நந்தவனபாளையம் பகுதியைச் சேர்ந்த 75-வயது முதியவர் முத்து, மரம் ஏறி தேங்காய் போடும் தொழிலாளி. 40 வருடங்களுக்கு மேலாக இப்பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இதனிடையே இன்று அப்பகுதியில் உள்ள 65-அடி உயரமுள்ள தென்னை மரத்தில் ஏரி தேங்காய் போடும் பணியில் ஈடுபட்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக மின்சார வயர் ஆனது, தென்னை மட்டையில் பட்டு முத்துவின் உடலில் பாய்ந்தது.

இதில், மின்சாரம் தாக்கி மரத்திலேயே தொங்கியபடி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த முதியவர் முத்து குறித்து அப்பகுதியினர், தீயணைப்புத்துறையினருக்குக் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையின் ஏணியின் மூலம் மரத்தில் ஏறி, முதியவரை உயிருடன் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் முதியவரின் கைகளில் மட்டும் தீ காயம் ஏற்பட்டது.



இதனிடையே முதியவரை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்களை அப்பகுதி பொது மக்கள் வெகுவாக பாராட்டினர்.

Newsletter

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...