மின்சாரம் தாக்கி மரத்திலேயே தொங்கிய முதியவரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர். இந்த விபத்தில் முதியவரின் கைகளில் மட்டும் தீ காயம் ஏற்பட்டது.
திருப்பூர்: திருப்பூர் அருகே மின்சாரம் தாக்கி மரத்திலேயே தொங்கிய முதியவரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர். இந்த விபத்தில் முதியவரின் கைகளில் மட்டும் தீ காயம் ஏற்பட்டது. இதனிடையே முதியவரை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்களை அப்பகுதி பொது மக்கள் வெகுவாக பாராட்டினர்.
திருப்பூர் மாவட்டம் குண்டடம், நந்தவனபாளையம் பகுதியைச் சேர்ந்த 75-வயது முதியவர் முத்து, மரம் ஏறி தேங்காய் போடும் தொழிலாளி. 40 வருடங்களுக்கு மேலாக இப்பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இதனிடையே இன்று அப்பகுதியில் உள்ள 65-அடி உயரமுள்ள தென்னை மரத்தில் ஏரி தேங்காய் போடும் பணியில் ஈடுபட்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக மின்சார வயர் ஆனது, தென்னை மட்டையில் பட்டு முத்துவின் உடலில் பாய்ந்தது.
இதில், மின்சாரம் தாக்கி மரத்திலேயே தொங்கியபடி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த முதியவர் முத்து குறித்து அப்பகுதியினர், தீயணைப்புத்துறையினருக்குக் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையின் ஏணியின் மூலம் மரத்தில் ஏறி, முதியவரை உயிருடன் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் முதியவரின் கைகளில் மட்டும் தீ காயம் ஏற்பட்டது.

இதனிடையே முதியவரை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்களை அப்பகுதி பொது மக்கள் வெகுவாக பாராட்டினர்.
திருப்பூர் மாவட்டம் குண்டடம், நந்தவனபாளையம் பகுதியைச் சேர்ந்த 75-வயது முதியவர் முத்து, மரம் ஏறி தேங்காய் போடும் தொழிலாளி. 40 வருடங்களுக்கு மேலாக இப்பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இதனிடையே இன்று அப்பகுதியில் உள்ள 65-அடி உயரமுள்ள தென்னை மரத்தில் ஏரி தேங்காய் போடும் பணியில் ஈடுபட்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக மின்சார வயர் ஆனது, தென்னை மட்டையில் பட்டு முத்துவின் உடலில் பாய்ந்தது.
இதில், மின்சாரம் தாக்கி மரத்திலேயே தொங்கியபடி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த முதியவர் முத்து குறித்து அப்பகுதியினர், தீயணைப்புத்துறையினருக்குக் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையின் ஏணியின் மூலம் மரத்தில் ஏறி, முதியவரை உயிருடன் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் முதியவரின் கைகளில் மட்டும் தீ காயம் ஏற்பட்டது.
இதனிடையே முதியவரை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்களை அப்பகுதி பொது மக்கள் வெகுவாக பாராட்டினர்.