விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அங்கிருந்த அதிகாரியிடம் கேட்டுக் கொண்டார்.
கோவை: கோவை கிணத்துக்கடவில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தை எம்.எல்.ஏ., தாமோதரன் ஆய்வு செய்தார்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பொள்ளாச்சி சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் சிதிலமடைந்து கிடந்த ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்கம் மையத்தை இடித்து கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் 1.75 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கியது. தற்போது இந்த கட்டடம் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது.

இந்த நிலையில், இன்று இரண்டு மாடியுடன் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தை கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் தாமோதரன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அங்கிருந்த அதிகாரியிடம் கேட்டுக் கொண்டார்.
இந்த ஆய்வின்போது கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய தலைவர் நாகராணி, கிணத்துக்கடவு அதிமுக நகர செயலாளர் மூர்த்தி, மனோகரன், சிங் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பொள்ளாச்சி சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் சிதிலமடைந்து கிடந்த ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்கம் மையத்தை இடித்து கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் 1.75 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கியது. தற்போது இந்த கட்டடம் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது.
இந்த நிலையில், இன்று இரண்டு மாடியுடன் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தை கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் தாமோதரன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அங்கிருந்த அதிகாரியிடம் கேட்டுக் கொண்டார்.
இந்த ஆய்வின்போது கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய தலைவர் நாகராணி, கிணத்துக்கடவு அதிமுக நகர செயலாளர் மூர்த்தி, மனோகரன், சிங் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.