கோவையில் தொடரும் ஆன்லைன் மோசடிகள்..! குறுஞ்செய்தி அனுப்பி ரூ.20 ஆயிரம் திருட்டு - சைபர் கிரைம் போலீசார் விசாரணை..!

பான் கார்டை பதிவேற்றம் செய்ய இல்லை என்றால் வங்கிக் கணக்கு முடக்கப்படும் என்று வந்த குறுஞ்செய்தியை நம்பி லிங்க்கை அழுத்தியவுடன் வங்கி கணக்கில் இருந்து ரூ.20 ஆயிரம் மாயமானது.


கோவை: கோவையில் செல்போனுக்கு மெசேஜ் அனுப்பி பான் கார்டை பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் இல்லை என்றால் உங்கள் வங்கிக் கணக்கு முடக்கப்படும் என கூறியதை தொடர்ந்து பான் கார்டை பதிவேற்றம் செய்தவருடைய வங்கிக் கணக்கிலிருந்து 20 ஆயிரம் அபேஸ் செய்தவர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை ஆர்.எஸ்.புரம். பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் (38). இவரது கைப்பேசிக்குக் குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில், நீங்கள் உங்களது பான்கார்டை பதிவேற்றம் செய்யவில்லை என்றால், வங்கிக் கணக்கு முடக்கப்படும் என பதிவிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, உடனே அவர் அந்த லிங்க்கை அழுத்த, அடுத்த நொடியே அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.20 ஆயிரம் மாயமானது.

இதையடுத்து, அதிர்ச்சியடைந்த அவர் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், மோசடி நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...