பான் கார்டை பதிவேற்றம் செய்ய இல்லை என்றால் வங்கிக் கணக்கு முடக்கப்படும் என்று வந்த குறுஞ்செய்தியை நம்பி லிங்க்கை அழுத்தியவுடன் வங்கி கணக்கில் இருந்து ரூ.20 ஆயிரம் மாயமானது.
கோவை: கோவையில் செல்போனுக்கு மெசேஜ் அனுப்பி பான் கார்டை பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் இல்லை என்றால் உங்கள் வங்கிக் கணக்கு முடக்கப்படும் என கூறியதை தொடர்ந்து பான் கார்டை பதிவேற்றம் செய்தவருடைய வங்கிக் கணக்கிலிருந்து 20 ஆயிரம் அபேஸ் செய்தவர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை ஆர்.எஸ்.புரம். பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் (38). இவரது கைப்பேசிக்குக் குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில், நீங்கள் உங்களது பான்கார்டை பதிவேற்றம் செய்யவில்லை என்றால், வங்கிக் கணக்கு முடக்கப்படும் என பதிவிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, உடனே அவர் அந்த லிங்க்கை அழுத்த, அடுத்த நொடியே அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.20 ஆயிரம் மாயமானது.
இதையடுத்து, அதிர்ச்சியடைந்த அவர் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், மோசடி நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை ஆர்.எஸ்.புரம். பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் (38). இவரது கைப்பேசிக்குக் குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில், நீங்கள் உங்களது பான்கார்டை பதிவேற்றம் செய்யவில்லை என்றால், வங்கிக் கணக்கு முடக்கப்படும் என பதிவிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, உடனே அவர் அந்த லிங்க்கை அழுத்த, அடுத்த நொடியே அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.20 ஆயிரம் மாயமானது.
இதையடுத்து, அதிர்ச்சியடைந்த அவர் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், மோசடி நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.