கைதான பள்ளி முதல்வரை ஜாமினில் விடுவிக்கக் கோரி கோவை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நேற்று மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கோவை: கோவை மாணவி பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்த வழக்கில் கைதான பள்ளி முதல்வர் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த, 17 வயது பிளஸ் 2 மாணவி, கடந்த 12ம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்த போது, அப்பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி (35) பாலியல் தொல்லை கொடுத்ததால் தற்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, அவரை 'போக்சோ' பிரிவில் போலீசார் கைது செய்து, உடுமலை கிளை சிறையில் அடைத்தனர்.
ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுப்பதாக, பள்ளி முதல்வரிடம் மாணவி பல முறை புகார் அளித்தும், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காத பள்ளி முதல்வர் மினி ஜாக்சன் (எ) மீரா ஜாக்சனை (46) கைது செய்யக்கோரி, மாணவியின் சடலத்தை வாங்க மறுத்து பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து, பெங்களூருவில் தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பள்ளி முதல்வரை ஜாமினில் விடுவிக்க கோரி கோவை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கைதான ஆசிரியர் மிதுன்சக்ரவர்த்தியை 'கஸ்டடி' எடுத்து விசாரிக்க மகளிர் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த, 17 வயது பிளஸ் 2 மாணவி, கடந்த 12ம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்த போது, அப்பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி (35) பாலியல் தொல்லை கொடுத்ததால் தற்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, அவரை 'போக்சோ' பிரிவில் போலீசார் கைது செய்து, உடுமலை கிளை சிறையில் அடைத்தனர்.
ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுப்பதாக, பள்ளி முதல்வரிடம் மாணவி பல முறை புகார் அளித்தும், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காத பள்ளி முதல்வர் மினி ஜாக்சன் (எ) மீரா ஜாக்சனை (46) கைது செய்யக்கோரி, மாணவியின் சடலத்தை வாங்க மறுத்து பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து, பெங்களூருவில் தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பள்ளி முதல்வரை ஜாமினில் விடுவிக்க கோரி கோவை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கைதான ஆசிரியர் மிதுன்சக்ரவர்த்தியை 'கஸ்டடி' எடுத்து விசாரிக்க மகளிர் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.