கோவை மாணவி பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்த வழக்கில் கைதான பள்ளி முதல்வர் ஜாமின் கோரி மனு தாக்கல்..!

கைதான பள்ளி முதல்வரை ஜாமினில் விடுவிக்கக் கோரி கோவை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நேற்று மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாணவி பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்த வழக்கில் கைதான பள்ளி முதல்வர் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த, 17 வயது பிளஸ் 2 மாணவி, கடந்த 12ம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்த போது, அப்பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி (35) பாலியல் தொல்லை கொடுத்ததால் தற்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, அவரை 'போக்சோ' பிரிவில் போலீசார் கைது செய்து, உடுமலை கிளை சிறையில் அடைத்தனர்.

ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுப்பதாக, பள்ளி முதல்வரிடம் மாணவி பல முறை புகார் அளித்தும், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காத பள்ளி முதல்வர் மினி ஜாக்சன் (எ) மீரா ஜாக்சனை (46) கைது செய்யக்கோரி, மாணவியின் சடலத்தை வாங்க மறுத்து பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து, பெங்களூருவில் தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பள்ளி முதல்வரை ஜாமினில் விடுவிக்க கோரி கோவை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கைதான ஆசிரியர் மிதுன்சக்ரவர்த்தியை 'கஸ்டடி' எடுத்து விசாரிக்க மகளிர் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...