தமிழ்நாடு குழந்தைகள் ஆணைய தலைவர் சரஸ்வதி, ஆணைய உறுப்பினர்கள் கோவை, திருப்பூர் மாவட்டத்துக்கு விசாரணைக்காக நாளை வருகை தருகின்றனர்.
கோவை: கோவையில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட நிலையில், இந்த வழக்கில் குழந்தைகள் ஆணையம் விசாரணை நடத்த உள்ளது.
கோவையில் கடந்த 11ம் தேதி மாலையில் உக்கடம் பகுதியில் வசித்து வந்த பிளஸ் டூ மாணவி பொன் தாரணி பள்ளி ஆசிரியரின் தொடர் பாலியல் தொந்தரவால், கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விஸ்வரூபம் எடுத்தது.
இதனைத்தொடர்ந்து, 12ம் தேதி இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், பெங்களூருவில் பதுங்கியிருந்த பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், தமிழ்நாடு குழந்தைகள் ஆணைய தலைவர் சரஸ்வதி, ஆணைய உறுப்பினர்கள் கோவை, திருப்பூர் மாவட்டத்துக்கு விசாரணைக்காக நாளை வருகை தருகின்றனர்.
தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணைய சட்டப்படி (CPCR Act, 2005) தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் ஆணையத்துக்கு குழந்தைகள் தொடர்பானவை குறித்து ஆய்வு செய்யவும் கண்காணிக்கவும் விசாரணை செய்ய அதிகாரம் தந்துள்ளனர்.
சிவில் நீதிமன்றத்தைப் போல அழைப்பாணை (summon) அனுப்பி விசாரணை வாக்குமூலத்தை பதிவு செய்து ஆவணங்களை கேட்டுப் பெற்று இவற்றை ஆராய்ந்து விசாரணை முடிவுகளை ஆணையம் மேற்கொள்கிறது.
போக்ஸோ (section 44 of pocso Act, 2012) சட்டப்படி குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் குறித்த வழக்குகளையும் கண்காணிக்கும் அதிகாரம் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் ஆணையத்துக்கு தந்துள்ளனர்.
அதன்படி, கோவையில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட நிலையில், இந்த வழக்கில் குழந்தைகள் ஆணையம் விசாரணை நடத்த உள்ளது.
கோவையில் கடந்த 11ம் தேதி மாலையில் உக்கடம் பகுதியில் வசித்து வந்த பிளஸ் டூ மாணவி பொன் தாரணி பள்ளி ஆசிரியரின் தொடர் பாலியல் தொந்தரவால், கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விஸ்வரூபம் எடுத்தது.
இதனைத்தொடர்ந்து, 12ம் தேதி இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், பெங்களூருவில் பதுங்கியிருந்த பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், தமிழ்நாடு குழந்தைகள் ஆணைய தலைவர் சரஸ்வதி, ஆணைய உறுப்பினர்கள் கோவை, திருப்பூர் மாவட்டத்துக்கு விசாரணைக்காக நாளை வருகை தருகின்றனர்.
தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணைய சட்டப்படி (CPCR Act, 2005) தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் ஆணையத்துக்கு குழந்தைகள் தொடர்பானவை குறித்து ஆய்வு செய்யவும் கண்காணிக்கவும் விசாரணை செய்ய அதிகாரம் தந்துள்ளனர்.
சிவில் நீதிமன்றத்தைப் போல அழைப்பாணை (summon) அனுப்பி விசாரணை வாக்குமூலத்தை பதிவு செய்து ஆவணங்களை கேட்டுப் பெற்று இவற்றை ஆராய்ந்து விசாரணை முடிவுகளை ஆணையம் மேற்கொள்கிறது.
போக்ஸோ (section 44 of pocso Act, 2012) சட்டப்படி குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் குறித்த வழக்குகளையும் கண்காணிக்கும் அதிகாரம் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் ஆணையத்துக்கு தந்துள்ளனர்.
அதன்படி, கோவையில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட நிலையில், இந்த வழக்கில் குழந்தைகள் ஆணையம் விசாரணை நடத்த உள்ளது.