கோவையில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரண தொகை மற்றும் மாற்று வீடு வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் மனு..!

கெம்பட்டி காலனியில் வசித்து வரும் நாகேந்திரன், பிரியா தம்பதிகளுக்கு நிவாரண தொகை மற்றும் மாற்று வீடு வழங்க கோரி மனு அளித்தார்.


கோவை: கோவையில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரண தொகை மற்றும் மாற்று வீடு வழங்க கோரி மாவட்ட ஆட்சியருக்கு பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் மனு அளித்தார்.

கோவை மாவட்டம் தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 84 வார்டு கெம்பட்டி காலனி, உப்புமண்டி பின்புறம் வசித்து வரும் நாகேந்திரன், பிரியா இவர்களின் இரண்டரை வயது ஆண் குழந்தை கிரண் கடந்த நவம்பர் 13ம் தேதியன்று இரவு பெய்த மழையில் இவர்கள் குடியிருந்த வீட்டின் சுவர் இடிந்து இவர்கள் மீது விழுந்து மூவரும் படுகாயம் அடைந்தனர். பின்னர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இது குறித்து, மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கூறியதாவது;

வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் நேற்றிரவு குழந்தை கிரண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்ததாகவும், அந்த குழந்தையை இழந்து வாடும் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்தார்.

மேலும், உயிரிழந்த குழந்தையின் குடும்பத்திற்கும், படுகாயம் அடைந்த தாய், தந்தையருக்கும் தமிழக அரசின் அதிகபட்ச நிவாரண தொகையை உடனடியாக வழங்கிட ஆவண செய்து, அவர்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலமாக வீடு ஒதுக்கித் தருமாறும் அந்த மனுவில் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...