கெம்பட்டி காலனியில் வசித்து வரும் நாகேந்திரன், பிரியா தம்பதிகளுக்கு நிவாரண தொகை மற்றும் மாற்று வீடு வழங்க கோரி மனு அளித்தார்.
கோவை: கோவையில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரண தொகை மற்றும் மாற்று வீடு வழங்க கோரி மாவட்ட ஆட்சியருக்கு பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் மனு அளித்தார்.
கோவை மாவட்டம் தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 84 வார்டு கெம்பட்டி காலனி, உப்புமண்டி பின்புறம் வசித்து வரும் நாகேந்திரன், பிரியா இவர்களின் இரண்டரை வயது ஆண் குழந்தை கிரண் கடந்த நவம்பர் 13ம் தேதியன்று இரவு பெய்த மழையில் இவர்கள் குடியிருந்த வீட்டின் சுவர் இடிந்து இவர்கள் மீது விழுந்து மூவரும் படுகாயம் அடைந்தனர். பின்னர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து, மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கூறியதாவது;
வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் நேற்றிரவு குழந்தை கிரண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்ததாகவும், அந்த குழந்தையை இழந்து வாடும் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்தார்.
மேலும், உயிரிழந்த குழந்தையின் குடும்பத்திற்கும், படுகாயம் அடைந்த தாய், தந்தையருக்கும் தமிழக அரசின் அதிகபட்ச நிவாரண தொகையை உடனடியாக வழங்கிட ஆவண செய்து, அவர்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலமாக வீடு ஒதுக்கித் தருமாறும் அந்த மனுவில் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.
கோவை மாவட்டம் தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 84 வார்டு கெம்பட்டி காலனி, உப்புமண்டி பின்புறம் வசித்து வரும் நாகேந்திரன், பிரியா இவர்களின் இரண்டரை வயது ஆண் குழந்தை கிரண் கடந்த நவம்பர் 13ம் தேதியன்று இரவு பெய்த மழையில் இவர்கள் குடியிருந்த வீட்டின் சுவர் இடிந்து இவர்கள் மீது விழுந்து மூவரும் படுகாயம் அடைந்தனர். பின்னர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து, மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கூறியதாவது;
வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் நேற்றிரவு குழந்தை கிரண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்ததாகவும், அந்த குழந்தையை இழந்து வாடும் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்தார்.
மேலும், உயிரிழந்த குழந்தையின் குடும்பத்திற்கும், படுகாயம் அடைந்த தாய், தந்தையருக்கும் தமிழக அரசின் அதிகபட்ச நிவாரண தொகையை உடனடியாக வழங்கிட ஆவண செய்து, அவர்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலமாக வீடு ஒதுக்கித் தருமாறும் அந்த மனுவில் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.