தி.மு.க பேச்சாளர்கள் 9-பேர் மீது போடப்பட்ட அவதூறு வழக்கு வாபஸ்.!!

கோவை நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள 9-பேர் மீதான வழக்கை திரும்ப பெற, மாவட்ட ஆட்சியர் கடிதம் அனுப்பினார். அதன்படி, தி.மு.க., பேச்சாளர்கள் மீது நிலுவை வழக்குகள், நீதிமன்றத்தில் முறைப்படி மனுத் தாக்கல் செய்து திரும்பப்பெறப்படுகிறது.


கோவை: அ.தி.மு.க., ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட, தி.மு.க., பேச்சாளர்கள் மீதான அவதூறு வழக்கு திரும்பப்பெறப்படுகிறது.

அ.தி.மு.க., ஆட்சியில், 2011-2016ல், ஜெயலலிதா, முதல்வராக இருந்தபோது, கோவையில் பல்வேறு இடங்களில் தி.மு.க., பொதுக்கூட்டம் நடந்தது.

அப்போது, ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக, தி.மு.க., பேச்சாளர்கள் அதிரடி அல்தாப், ஆடுதுறை உத்திராபதி, கரூர் முரளி, கரூர் கணேசன், சேப்பாக்கம் பிரபாகரன், குடியாத்தம் குமரன், கோவை வக்கீல் அருள்மொழி, ஒப்பிலாமணி ஆகியோர் மீது, கோவை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

அரசியல்வாதிகள் மீதான அவதூறு வழக்கை வாபஸ் பெற, அரசு சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை வாபஸ் பெறக் கடந்த, ஆகஸ்டில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து, கோவை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 9-பேர் மீதான வழக்கை வாபஸ் பெற, மாவட்ட ஆட்சியர், அரசு வழக்குரைஞருக்குக் கடிதம் அனுப்பினார்.

அதன்படி, தி.மு.க., பேச்சாளர்கள் மீது நிலுவை வழக்குகள், நீதிமன்றத்தில் முறைப்படி மனுத் தாக்கல் செய்து வாபஸ் பெறப்படுகிறது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...