குடியிருப்பு பகுதிகளில் குளம் போல் தேங்கி உள்ள கழிவு நீர்: சேரன்மாநகர் அருகே பரிதாபம்.!!

குடியிருப்பு பகுதியில் கழிவு நீர் தொடர்ந்து வெளியேறி வருவதால் நாளுக்கு நாள் நிலைமை மோசமாக மாறி வருகிறது. அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. உடனடியாக பிரச்சினைக்குத் தீர்வு காண பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


கோவை: குடியிருப்பு பகுதியில் கழிவு நீர் தொடர்ந்து வெளியேறி வருவதால் நாளுக்கு நாள் நிலைமை மோசமாக மாறி வருகிறது. அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. உடனடியாக பிரச்சினைக்குத் தீர்வு காண பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் 32-வது வார்டுக்குட்பட்ட சேரன்மாநகர் அருகே ராமாத்தாள் லே-அவுட், ஆசிரியர் காலனி உள்ளிட்ட பல குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.



கடந்த வாரம் பெய்த கன மழை தொடர்ந்து கழிவுநீர் கால்வாய் உடைப்பு ஏற்பட்டுக் கடந்த 6- நாட்களாகக் குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் குளம்போல் தேங்கி உள்ளன.



24 மணி நேரமும் தொடர்ந்து கழிவுநீர் வெளியேறி வருவதால் சுற்றுப்புறக் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள வீடுகளில் கழிவுநீர் குளம் போல் தேங்கி உள்ளன.



தவிர அதிக கழிவு நீர் ஒரே இடத்தில் தேங்கி உள்ள காரணத்தால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.



ராமாத்தாள் லே-அவுட் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த லட்சுமணன், ராஜேஷ் உள்ளிட்டோர் கூறியதாவது, "கடந்த வாரம் பெய்த தொடர் மழை காரணமாக எங்கள் குடியிருப்பு பகுதிகளில் அதிக அளவில் மழை நீர் தேங்கியது.

முதலில் மழை நீர் என்று நினைத்தோம், ஆனால் கழிவுநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுக் குடியிருப்பு பகுதிகள் முழுவதும் சூழ்ந்து உள்ளது. கழிவுநீர் என்பது துர்நாற்றம் வீசத் தொடங்கிய பின்புதான் தெரிய வந்தது.

தொடர்ந்து கழிவுநீர் வெளியேறிக் கொண்டே வருகிறது. இதன் காரணமாகச் சுற்றுப்புறக் குடியிருப்பு பகுதிகளில் வெளிப்புறங்களில் மட்டும் குளம்போல் கழிவுநீர் தேங்கியுள்ளது மட்டுமின்றி குடியிருப்பு பகுதிகளிலும் கழிவுநீர் தேங்கி உள்ளன.

கழிவுநீர் தொடர்ந்து வெளியேறி வருவதால் நாளுக்கு நாள் நிலைமை மிகவும் மோசமாக மாறி வருகிறது. மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக பிரச்சினைக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்."

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...