வால்பாறையில் குடியிருப்பு பகுதிகளை சேதப்படுத்திய காட்டுயானைகள்.!

காட்டு யானைகள் எஸ்டேட் அலுவலகத்தையும் குடியிருப்புகளையும் இடித்து சேதப்படுத்தியதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். தகவலறிந்து வந்த வனத்துறையினர் யானைகளை பட்டாசு வெடித்து தீப்பந்தங்கள் போட்டு வனப்பகுதிக்குள் விரட்டினர்.


கோவை: வால்பாறையில் காட்டு யானைகள் எஸ்டேட் அலுவலகத்தையும் குடியிருப்புகளையும் இடித்து சேதப்படுத்தியதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. யானைகள் நடமாட்டத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

யானைகள் நடமாட்டத்தால் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வீடுகள் நியாயவிலைக்கடைகள் மளிகைக் கடைகள் சத்துணவு மையங்கள் போன்றவற்றை உடைத்து உள்ளே இருந்த உணவு பொருட்களைச் சாப்பிட்டுச் சேதப்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.



நேற்றிரவு வால்பாறை அருகே ஊசிமலை மற்றும் எஸ்டேட் பகுதியில் 8-காட்டு யானைகள் வனப் பகுதியிலிருந்து குடியிருப்புக்குள் நுழைந்து எஸ்டேட் அலுவலக ஸ்டோர் ரூமில் இருந்த பொருட்களை உடைத்து உள்ளே இருந்த பொருட்களைச் சேதப்படுத்தியது.



அருகிலிருந்த தேவாலயத்தின் ஜன்னல் கதவை உடைத்துச் சேதப்படுத்தியது.



தகவலறிந்து வந்த வனத்துறையினர் யானைகளைப் பட்டாசு வெடித்து தீப்பந்தங்கள் போட்டு அப்பகுதியிலிருந்து விரட்டினர்.

யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறைக்குப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...