காட்டு யானைகள் எஸ்டேட் அலுவலகத்தையும் குடியிருப்புகளையும் இடித்து சேதப்படுத்தியதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். தகவலறிந்து வந்த வனத்துறையினர் யானைகளை பட்டாசு வெடித்து தீப்பந்தங்கள் போட்டு வனப்பகுதிக்குள் விரட்டினர்.
கோவை: வால்பாறையில் காட்டு யானைகள் எஸ்டேட் அலுவலகத்தையும் குடியிருப்புகளையும் இடித்து சேதப்படுத்தியதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. யானைகள் நடமாட்டத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
யானைகள் நடமாட்டத்தால் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வீடுகள் நியாயவிலைக்கடைகள் மளிகைக் கடைகள் சத்துணவு மையங்கள் போன்றவற்றை உடைத்து உள்ளே இருந்த உணவு பொருட்களைச் சாப்பிட்டுச் சேதப்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

நேற்றிரவு வால்பாறை அருகே ஊசிமலை மற்றும் எஸ்டேட் பகுதியில் 8-காட்டு யானைகள் வனப் பகுதியிலிருந்து குடியிருப்புக்குள் நுழைந்து எஸ்டேட் அலுவலக ஸ்டோர் ரூமில் இருந்த பொருட்களை உடைத்து உள்ளே இருந்த பொருட்களைச் சேதப்படுத்தியது.

அருகிலிருந்த தேவாலயத்தின் ஜன்னல் கதவை உடைத்துச் சேதப்படுத்தியது.

தகவலறிந்து வந்த வனத்துறையினர் யானைகளைப் பட்டாசு வெடித்து தீப்பந்தங்கள் போட்டு அப்பகுதியிலிருந்து விரட்டினர்.
யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறைக்குப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. யானைகள் நடமாட்டத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
யானைகள் நடமாட்டத்தால் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வீடுகள் நியாயவிலைக்கடைகள் மளிகைக் கடைகள் சத்துணவு மையங்கள் போன்றவற்றை உடைத்து உள்ளே இருந்த உணவு பொருட்களைச் சாப்பிட்டுச் சேதப்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
நேற்றிரவு வால்பாறை அருகே ஊசிமலை மற்றும் எஸ்டேட் பகுதியில் 8-காட்டு யானைகள் வனப் பகுதியிலிருந்து குடியிருப்புக்குள் நுழைந்து எஸ்டேட் அலுவலக ஸ்டோர் ரூமில் இருந்த பொருட்களை உடைத்து உள்ளே இருந்த பொருட்களைச் சேதப்படுத்தியது.
அருகிலிருந்த தேவாலயத்தின் ஜன்னல் கதவை உடைத்துச் சேதப்படுத்தியது.
தகவலறிந்து வந்த வனத்துறையினர் யானைகளைப் பட்டாசு வெடித்து தீப்பந்தங்கள் போட்டு அப்பகுதியிலிருந்து விரட்டினர்.
யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறைக்குப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.