கருமத்தம்பட்டியில் காணாமல் போன மாணவி டெல்லியில் இருப்பதாக தகவல்.!!

கருமத்தம்பட்டியில் காணாமல் போன மாணவி டெல்லியில் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அந்த மாணவியை மீட்க போலீசார் மற்றும் பெற்றோர் கோவையிலிருந்து விமானம் மூலம் டெல்லி சென்றனர்.


கோவை: கருமத்தம்பட்டியில் காணாமல் போன மாணவி டெல்லியில் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அந்த மாணவியை மீட்க போலீசார் மற்றும் பெற்றோர் கோவையிலிருந்து விமானம் மூலம் டெல்லி சென்றனர்.

கோவை கருமத்தம்பட்டி வீரமாத்தி அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த அரசு போக்குவரத்துக்கழக நடத்துனரின் 15 வயது மகள் கருமத்தம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார்.

இவர் கடந்த 12-ஆம் தேதி வழக்கம் போல வீட்டிலிருந்து பள்ளிக்குப் புறப்பட்டார். ஆனால் பள்ளிக்குச் செல்லவில்லை. மகள் வீடு திரும்பாததால் பெற்றோர் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது மாணவி டெல்லியில் கால்பந்து அணியில் சேர்வதற்காகத் தனியாகக் கோவையிலிருந்து ரயிலில் டெல்லி சென்றது தெரியவந்தது.

நேற்று டெல்லி போலீசார் கொடுத்த தகவலின் அடிப்படையில் மாணவியின் தந்தை மற்றும் போலீசார் தொலைப்பேசியில் பேசினார். அப்போது அந்த மாணவி பெற்றோரை வந்து தன்னை அழைத்துச் செல்லுமாறு கூறினார்.

அந்த மாணவியை மீட்க போலீசார் மற்றும் பெற்றோர் கோவையிலிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.

Newsletter

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...