கருமத்தம்பட்டியில் காணாமல் போன மாணவி டெல்லியில் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அந்த மாணவியை மீட்க போலீசார் மற்றும் பெற்றோர் கோவையிலிருந்து விமானம் மூலம் டெல்லி சென்றனர்.
கோவை: கருமத்தம்பட்டியில் காணாமல் போன மாணவி டெல்லியில் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அந்த மாணவியை மீட்க போலீசார் மற்றும் பெற்றோர் கோவையிலிருந்து விமானம் மூலம் டெல்லி சென்றனர்.
கோவை கருமத்தம்பட்டி வீரமாத்தி அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த அரசு போக்குவரத்துக்கழக நடத்துனரின் 15 வயது மகள் கருமத்தம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார்.
இவர் கடந்த 12-ஆம் தேதி வழக்கம் போல வீட்டிலிருந்து பள்ளிக்குப் புறப்பட்டார். ஆனால் பள்ளிக்குச் செல்லவில்லை. மகள் வீடு திரும்பாததால் பெற்றோர் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது மாணவி டெல்லியில் கால்பந்து அணியில் சேர்வதற்காகத் தனியாகக் கோவையிலிருந்து ரயிலில் டெல்லி சென்றது தெரியவந்தது.
நேற்று டெல்லி போலீசார் கொடுத்த தகவலின் அடிப்படையில் மாணவியின் தந்தை மற்றும் போலீசார் தொலைப்பேசியில் பேசினார். அப்போது அந்த மாணவி பெற்றோரை வந்து தன்னை அழைத்துச் செல்லுமாறு கூறினார்.
அந்த மாணவியை மீட்க போலீசார் மற்றும் பெற்றோர் கோவையிலிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.
கோவை கருமத்தம்பட்டி வீரமாத்தி அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த அரசு போக்குவரத்துக்கழக நடத்துனரின் 15 வயது மகள் கருமத்தம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார்.
இவர் கடந்த 12-ஆம் தேதி வழக்கம் போல வீட்டிலிருந்து பள்ளிக்குப் புறப்பட்டார். ஆனால் பள்ளிக்குச் செல்லவில்லை. மகள் வீடு திரும்பாததால் பெற்றோர் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது மாணவி டெல்லியில் கால்பந்து அணியில் சேர்வதற்காகத் தனியாகக் கோவையிலிருந்து ரயிலில் டெல்லி சென்றது தெரியவந்தது.
நேற்று டெல்லி போலீசார் கொடுத்த தகவலின் அடிப்படையில் மாணவியின் தந்தை மற்றும் போலீசார் தொலைப்பேசியில் பேசினார். அப்போது அந்த மாணவி பெற்றோரை வந்து தன்னை அழைத்துச் செல்லுமாறு கூறினார்.
அந்த மாணவியை மீட்க போலீசார் மற்றும் பெற்றோர் கோவையிலிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.