கோவை மாநகராட்சியில், பொதுக்கழிப்பிடத்தைச் சரியாகப் பராமரிக்காத இளநிலை பொறியாளருக்கு 'மெமோ' வழங்க, கமிஷனர் ராஜகோபால் உத்தரவிட்டார்.
கோவை: கோவை மாநகராட்சியில், பொதுக்கழிப்பிடத்தைச் சரியாகப் பராமரிக்காத இளநிலை பொறியாளருக்கு 'மெமோ' வழங்க, கமிஷனர் ராஜகோபால் உத்தரவிட்டார்.
கோவை மாநகராட்சி, 10வது வார்டு, கருணாநிதி நகரில் உள்ள பொதுக்கழிப்பிடம் சரியாகப் பராமரிக்கப்படுகிறதா என, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது, அப்பகுதி பொதுமக்களிடம் அவர் பேசியபோது, 'தெருவிளக்கு எரிவதில்லை. கழிவுநீர் வெளியேறுவதில்லை. கழிப்பறை பயன்படுத்தத் தண்ணீர் இல்லை' என, பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினர்.
மோட்டார் பழுதாகி, தண்ணீரின்றி, பராமரிப்பு இல்லாமல் உள்ள பொதுக்கழிப்பிடத்தைப் பார்வையிட்ட கமிஷனர், பராமரிப்பு செலவுக்கு எப்படி பில் எழுதப்படுகிறது என கேள்வி கேட்டார். இப்பிரச்சினையில், இளநிலை பொறியாளர் ஹரிக்கு 'மெமோ' வழங்க உத்தரவிட்டார்.
பின், ராமசாமி வீதி, எம்.ஜி.ஆர்., மார்க்கெட் பின்புறம் மக்கும் குப்பையில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தைப் பார்வையிட்ட கமிஷனர், அதன் செயல்பாடுகளைக் கேட்டறிந்து, அறிவுரை வழங்கினார். அப்போது, உதவி நிர்வாக பொறியாளர் ஹேமலதா, மண்டல சுகாதார அலுவலர் சண்முகநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கோவை மாநகராட்சி, 10வது வார்டு, கருணாநிதி நகரில் உள்ள பொதுக்கழிப்பிடம் சரியாகப் பராமரிக்கப்படுகிறதா என, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது, அப்பகுதி பொதுமக்களிடம் அவர் பேசியபோது, 'தெருவிளக்கு எரிவதில்லை. கழிவுநீர் வெளியேறுவதில்லை. கழிப்பறை பயன்படுத்தத் தண்ணீர் இல்லை' என, பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினர்.
மோட்டார் பழுதாகி, தண்ணீரின்றி, பராமரிப்பு இல்லாமல் உள்ள பொதுக்கழிப்பிடத்தைப் பார்வையிட்ட கமிஷனர், பராமரிப்பு செலவுக்கு எப்படி பில் எழுதப்படுகிறது என கேள்வி கேட்டார். இப்பிரச்சினையில், இளநிலை பொறியாளர் ஹரிக்கு 'மெமோ' வழங்க உத்தரவிட்டார்.
பின், ராமசாமி வீதி, எம்.ஜி.ஆர்., மார்க்கெட் பின்புறம் மக்கும் குப்பையில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தைப் பார்வையிட்ட கமிஷனர், அதன் செயல்பாடுகளைக் கேட்டறிந்து, அறிவுரை வழங்கினார். அப்போது, உதவி நிர்வாக பொறியாளர் ஹேமலதா, மண்டல சுகாதார அலுவலர் சண்முகநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.