கோவையில் பொதுக்கழிப்பிடத்தை பராமரிக்காத இளநிலை பொறியாளருக்கு 'மெமோ'.!!

கோவை மாநகராட்சியில், பொதுக்கழிப்பிடத்தைச் சரியாகப் பராமரிக்காத இளநிலை பொறியாளருக்கு 'மெமோ' வழங்க, கமிஷனர் ராஜகோபால் உத்தரவிட்டார்.


கோவை: கோவை மாநகராட்சியில், பொதுக்கழிப்பிடத்தைச் சரியாகப் பராமரிக்காத இளநிலை பொறியாளருக்கு 'மெமோ' வழங்க, கமிஷனர் ராஜகோபால் உத்தரவிட்டார்.

கோவை மாநகராட்சி, 10வது வார்டு, கருணாநிதி நகரில் உள்ள பொதுக்கழிப்பிடம் சரியாகப் பராமரிக்கப்படுகிறதா என, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் நேற்று ஆய்வு செய்தார்.



அப்போது, அப்பகுதி பொதுமக்களிடம் அவர் பேசியபோது, 'தெருவிளக்கு எரிவதில்லை. கழிவுநீர் வெளியேறுவதில்லை. கழிப்பறை பயன்படுத்தத் தண்ணீர் இல்லை' என, பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினர்.

மோட்டார் பழுதாகி, தண்ணீரின்றி, பராமரிப்பு இல்லாமல் உள்ள பொதுக்கழிப்பிடத்தைப் பார்வையிட்ட கமிஷனர், பராமரிப்பு செலவுக்கு எப்படி பில் எழுதப்படுகிறது என கேள்வி கேட்டார். இப்பிரச்சினையில், இளநிலை பொறியாளர் ஹரிக்கு 'மெமோ' வழங்க உத்தரவிட்டார்.

பின், ராமசாமி வீதி, எம்.ஜி.ஆர்., மார்க்கெட் பின்புறம் மக்கும் குப்பையில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தைப் பார்வையிட்ட கமிஷனர், அதன் செயல்பாடுகளைக் கேட்டறிந்து, அறிவுரை வழங்கினார். அப்போது, உதவி நிர்வாக பொறியாளர் ஹேமலதா, மண்டல சுகாதார அலுவலர் சண்முகநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...