கோவையில் பொதுக்கழிப்பிடத்தை பராமரிக்காத இளநிலை பொறியாளருக்கு 'மெமோ'.!!

கோவை மாநகராட்சியில், பொதுக்கழிப்பிடத்தைச் சரியாகப் பராமரிக்காத இளநிலை பொறியாளருக்கு 'மெமோ' வழங்க, கமிஷனர் ராஜகோபால் உத்தரவிட்டார்.


கோவை: கோவை மாநகராட்சியில், பொதுக்கழிப்பிடத்தைச் சரியாகப் பராமரிக்காத இளநிலை பொறியாளருக்கு 'மெமோ' வழங்க, கமிஷனர் ராஜகோபால் உத்தரவிட்டார்.

கோவை மாநகராட்சி, 10வது வார்டு, கருணாநிதி நகரில் உள்ள பொதுக்கழிப்பிடம் சரியாகப் பராமரிக்கப்படுகிறதா என, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் நேற்று ஆய்வு செய்தார்.



அப்போது, அப்பகுதி பொதுமக்களிடம் அவர் பேசியபோது, 'தெருவிளக்கு எரிவதில்லை. கழிவுநீர் வெளியேறுவதில்லை. கழிப்பறை பயன்படுத்தத் தண்ணீர் இல்லை' என, பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினர்.

மோட்டார் பழுதாகி, தண்ணீரின்றி, பராமரிப்பு இல்லாமல் உள்ள பொதுக்கழிப்பிடத்தைப் பார்வையிட்ட கமிஷனர், பராமரிப்பு செலவுக்கு எப்படி பில் எழுதப்படுகிறது என கேள்வி கேட்டார். இப்பிரச்சினையில், இளநிலை பொறியாளர் ஹரிக்கு 'மெமோ' வழங்க உத்தரவிட்டார்.

பின், ராமசாமி வீதி, எம்.ஜி.ஆர்., மார்க்கெட் பின்புறம் மக்கும் குப்பையில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தைப் பார்வையிட்ட கமிஷனர், அதன் செயல்பாடுகளைக் கேட்டறிந்து, அறிவுரை வழங்கினார். அப்போது, உதவி நிர்வாக பொறியாளர் ஹேமலதா, மண்டல சுகாதார அலுவலர் சண்முகநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...